Tuesday, July 27, 2010

ஆதிதிராவிடர்

தேனி : அரசு அலுவலக பதிவேடுகள், தபால்கள், விண்ணப்பங்களில் "ஆதிதிராவிடர்' என்றே கட்டாயம் எழுத வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், தலித்துகள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அந்த இனத்தவரை "ஆதிதிராவிடர்' என்றே குறிப்பிட வேண்டுமென 2007ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது பரவலாக யாருக்கும் தெரியவராத நிலையில், பல அரசு அலுவலகங்களில் உதவித்தொகை பெறுவதற்கான படிவங்கள், அரசு பதிவேடுகளில் தாழ்த்தப்பட்டோர் என்ற வாசகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திலுள்ள படிவத்தில் தாழ்த்தப்பட்டோர் என்ற பகுதி இடம் பெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "இனி அனைத்து விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களில் ஆதிதிராவிடர் என குறிப்பிட வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

No comments: