Saturday, July 31, 2010

நுகர்வோர்

புதுடில்லி: நீங்கள் வாங்கும் பொருளுக்கு கடைக்காரர் ரசீது தரவில்லையா? அப்படி என்றால் அவர் மீது நீங்கள் வழக்கு தொடுத்து அதற்கு இழப்பீடு பெறலாம். ஆம்... நுகர்வோர் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள திருத்தங்கள் இது போன்று பல்வேறு உரிமைகளை நுகர்வோருக்கு வழங்குகிறது. தற்போது நாடு முழுவதும் நுகர்வோரிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. முறையற்ற வணிக நடவடிக்கைகளை எதிர்த்து நுகர்வோர் கோர்ட்டுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போதைய ஆவணங்களின் படி, 35 நுகர்வோர் இழப்பீட்டுத் தீர்ப்பாணையங்கள் மாநில அளவிலும், 627 நுகர்வோர் அமைப்புகள் மாவட்ட அளவிலும், தேசிய அளவில் ஒரு கமிஷனும் இயங்குகின்றன. இந்த ஆண்டு ஏப்., வரை 34 லட்சம் நுகர்வோர் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 30 லட்சம் வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன. அதிகரித்து வரும் வழக்குகளைக் கருத்தில் கொண்டு "நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-1986' சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திருத்தங்கள் நுகர்வோருக்குத் தரமான பொருட்கள், உரிய விலையில் கிடைக்கவும், நுகர்வோரின் உரிமைகளை அதிகரிக்கவும் துணை செய்யும். சட்டத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், நீங்கள் வாங்கிய பொருளுக்கு கடைக்காரர் ரசீது தரவில்லையென்றால், அது குற்றமாகக் கருதப்படும். ஒவ்வொரு ரசீதும் நுகர்வோரை நம்பகமான வாடிக்கையாளராக உருவாக்குகிறது. அது தரப்படாவிட்டால் அந்த வியாபாரம், "முறையற்ற வணிக நடவடிக்கை'யாக கருதப்படும். அதேபோல் நுகர்வோர் வாங்கும் பொருள் பற்றிய அனைத்து விவரங்களையும் கடைக்காரர் நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்விதம் தெரிவிக்காமல் இருந்தால் அல்லது மறுத்தால் அதுவும் குற்றமாகக் கருதப்படும். மேலும், நுகர்வோர் கோர்ட் நடைமுறைகளான அதிகாரிகள் தேர்வு, வழக்குகளைத் தேர்வு செய்தல் அல்லது தள்ளுபடி செய்தல் போன்றவற்றில் வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நுகர்வோர், இணையதளம் மூலம் தங்கள் வழக்குகளைப் பதிவு செய்திடவும் இத்திருத்தம் வழி வகுக்கும். நீண்ட நாளாக நடக்கும் வழக்குகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் கோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கப்படும். தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஆவணங்களில் ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், மாநில நுகர்வோர் கமிஷன்கள், தங்கள் தீர்ப்புகளை மாற்றிக் கொள்ள கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். அதே போல், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கும் தீர்ப்பாணையங்கள் மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் அமைக்கப்படும்.

Wednesday, July 28, 2010

epicbrowser

இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஜூலை 14 அன்று மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.
இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.
அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.
இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.
இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.
மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.
பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

10 வயதில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் மதுரை சிறுமி சாதனை

மதுரை : பத்து வயதில் "ரெட் ஹாட் இன்ஜினியரிங் சான்றிதழ்-லைனக்ஸ் 5' தேர்வில் வெற்றி பெற்று, மதுரை சிறுமி சாதனை ஏற்படுத்தினார்.

மதுரை சேர்ந்தவர் முனியசாமி; இவரது மனைவி இந்துலேகா. இவர்களது இரண்டாவது மகள் லவிநாஸ்ரீ. தற்போது 10 வயதாகும் லவிநாஸ்ரீ, டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் படிக்கிறார். ஏற்கனவே 8வது வயதில் "மைக்ரோசாப்ட்" சான்றிதழ் தேர்விலும், 9வது வயதில் "மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர்' தேர்விலும் வெற்றி பெற்று, சாதனை படைத்தார்.இப்போது மிக கடினமான "ரெட் ஹாட் இன்ஜினியரிங் சான்றிதழ்' ஆன்-லைன் தேர்விலும் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். இவ்வளவு குறைந்த வயதில் உலகில் இத்தேர்வில் வெற்றி பெறுவது இவர் தான்.

குடும்பம் உருவான வரலாறு!

எழுதப்படாத சரித்திரம்
குடும்பம் உருவான வரலாறு!




தேவேந்திர வேளாளர்களின் குலமரபுக் கதைகளாகப் பல கிடைக்கின்றன. ஆய்வாளர் தே.ஞானசேகரன் சுமார் 12 கதைகளைத் தொகுத்துத் (மள்ளர் சமூக வரலாறு) தந்திருக்கிறார். ஒரு கதை, தேவேந்திரனுக்கும் நீர் நிலையில் இருக்கும் தாமரையில் இருக்கும் திருமகளுக்கும் பிறந்த குழந்தையின் வழியினரே தேவேந்திரர்கள் என்கிறது. தேவேந்திரனின் வியர்வையில் பிறந்தவர்கள் அவர்கள் என்கிறது ஒரு கதை.

இந்திரனின் பிள்ளை தேவேந்திரன் பள்ளிக்குச் செல்லாமல், குழிதோண்டி, தண்ணீர்ப் பாய்ச்சி உழவு செய்து விளையாடினான். இந்திரன் அதைக் கண்டு தேவேந்திரனை பூமிக்கு அனுப்பி வேளாண்மை செய்யச் சொல்லி இருக்கிறான். அந்த தேவேந்திரன் பூமிக்கு நெல்லைக் கொண்டு வந்து நட்டான். பார்வதியின் வியர்வையில் பிறந்தவன் கழியன்(கழிநீர் நீலை) என்பவன். அவன் மேலோகத்தில் முதல் முதலாக நெல்லைக் கண்டுபிடித்து அதைச் சாப்பிட்ட சிவன், அந்த அரிசியின் சுவையைப் பாராட்டுகிறார். அந்த கழியன் பூமியில் நெல் விவசாயம் செய்கிறான்.

ஒரு கதை இப்படிச் சொல்கிறது. பார்வதிக்கும் சிவனுக்கும் வல்லபன் என்று ஒரு குழந்தை பிறக்கிறான். வல்லபன், இந்திரனுக்கு வளர்ப்பு மகனாகிறான். அப்போது சிவன், ‘நீ நெல்லை உற்பத்தி செய்து, பூலோகத்தில் பயிர் செய்து மக்களைக் காப்பாற்று, நீ வேண்டும்போது பார்வதி கங்கை நீரைப் பொழிவாள், நீ இருக்கும் இடம் என்றென்றும் பசுமையாகவும், நீர் நிறைந்தும் இருக்கும் என்று வரம் அளித்து பூமிக்கு அவனை அனுப்புகிறார். தேவேந்திரன் குடும்பம், ‘செந்நெல், மண்வெட்டி, உழுவயல், நீர் நிறைந்த குளம், ஆறு’ வேண்டுமென்று கேட்டது. சிவனார் மகிழ்ந்து, கேட்டதைக் கொடுத்தார். அதுமுதல் தேவேந்திரர்கள் நெல் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

தேவேந்திர குல வேளாளர்களில் குலமரபுக் கதைகளின் சாரம் இதுதான். இந்தப் புராண, மக்கள் மரபுக் கதைகள், மூன்று விஷயங்களைத் தம் பாணியில் சொல்லி இருக்கின்றன. ஒன்று, நெல் மேல் உலகில் இருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டு, தேவேந்திர குலம் நெல்லை உருவாக்கி, உற்பத்தி செய்து வாழும் குலம். மூன்று, நெல் விவசாயத்துக்கு ஆதாரமாக நீர் நிலைகளை உருவாக்கியவர்கள். இக் கருத்தே அக் கதைகளின் சாரம். இவைகளை ஆராய்வோம். உலகம் முழுக்கப் பழைமையான சமுதாயங்களின் தோற்றக் கதைகள் இப்படியான குறியீடுகளாகத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இவைகள் கற்பனைகள் அல்ல. கதை ரூபமான உண்மைகள்.

1. நெல் மேல் உலகில் இருந்து, இந்திரன் உலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்க முடியாது. ஆனால், இதர பகுதியில் இருந்து அதாவது மலை மாதிரி குறிஞ்சி நிலப் பகுதியில் இருந்து ஆதி உழவர்களால் சமதளமான மருத நிலத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்பதே இக் கதையின் அர்த்தம். மலைப் பகுதியில், சமவெளிகளில் இயற்கையாக விளைந்துக்கிடந்த நெல் மணிகளைக் கண்டடைந்து, அதை விவசாய விஞ்ஞானமாக மாற்றிக் கழனிகளைத் தயார் செய்து பண்படுத்தி நெல் விதைத்து, நாற்றுகளை உருவாக்கி, மாற்றி நட்டு, விவசாயம் செய்திருப்பதையே அந்தக் கதைகள் குறிப்பிடுகின்றன. மலை என்பதைத்தான் மேல், மேல் உலகம் என்று மக்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.

2. ஆதி உழவர்களான, தேவேந்திர குலம், சுமார் அறுபது வகையான நெல்லைக் கண்டுபிடித்து விவசாயம் செய்திருக்கிறது. சங்க காலத்துக்குச் சற்று முன்னர், தமிழ் மக்கள் உணவில் நெல் பிரதான இடம் பெறவில்லை. வரகரிசி, தினை, கொள்ளு, அவரை ஆகியவை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாக, புறநானூறு 335ம் பாடல் சொல்கிறது. ஆக, தமிழர் உணவில் நெல் என்கிற உணவுப் பொருளைச் சேர்த்ததில் ஆதிகால உழவர்களான மள்ளர்க்குப் பேரிடம் உண்டு என்பது இந்தக் கதைகளின் அடுத்த சேதி.

3. நெல் விவசாயத்துக்காக நீர் நிலை, ஆறு, குளம், ஏரி, வாய்க்கால்கள் வேண்டும். அதை, நெல் விவசாயம் செய்த மள்ளர்கள் உருவாக்கினார்கள். இது ஒரு விஞ்ஞானம்தான். மழைத் தண்ணீர் ஓடும் பாதையைக் கண்டறிந்து, அது தேங்கி நிற்கும் இடத்தில் குளம் வெட்டினார்கள். பெரும் பள்ளத்தை ஏரி ஆக்கினார்கள். இயற்கை நீர்ப் பெருக்கை ஆறு என்று பெயரிட்டு (நிலத்தை அறுத்துக்கொண்டு செல்வதால் அது ஆறு ஆயிற்று. ஆறு என்றால் வழி என்று பொருள்) அதன் இரு கரையிலும் மேடுயர்த்திக் கரை கட்டிக்கொண்டார்கள். நீரை நிர்வாகம் செய்தவர்கள், நீர் ஆணிக்கர் என்று சொல்லப்பட்டார்கள். பண்ணைக்கு உரிமையாளர் பண்ணாடி ஆனார்கள். கடைமடைப் பகுதியில் விவசாயம் செய்தவர் கடையர் ஆனார்கள். மடை எடுக்கும் நுட்பம் கற்றவர்கள் மடையர் ஆனார்கள். களத்தில்நெற்களத்தில் பணி செய்தவர் களமர் ஆனார்கள். கால் என்றால் நிலப்பகுதி என்று பொருள். வெற்றிலைக் கால், என்றால் வெற்றிலை விளைநிலம் என்று அர்த்தம். நெற்காலில் பணி செய்தவர்கள் காலாடி ஆனார்கள். வாய்க்கால்காரர்களே வாய்காரர்.

மருத நிலத்தின் விவசாயம் நிலை பெற்றதை ஒட்டிய காலப் பகுதியில்தான்சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், குடும்பம் என்கிற சமூக அமைப்பு தோன்றி இருக்கிறது. ஒரு தலைவி, ஒரு தலைவன், குழந்தைகள் என்ற ரத்த உறவு கொண்டவர்கள், ஒரு கூரையின் கீழ், தனிச் சொத்து உரிமையோடு வாழத் தொடங்கிய காலம்தான் குடும்பம் என்ற அமைப்பு உருவான காலம். அது, மருத நில உழவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அந்த அமைப்புக்குக் காரணமாக இருந்த மருத நில உழவர்கள் குடும்பனார் எனப்பட்டார்கள். குலம், குழு வாழ்க்கை சிதைந்து, தனிச் சொத்து, தனிக்குடும்பம் உருவான பழம் காலத்து வரலாறு இது. சங்க இலக்கியம் முழுக்க முழுக்கக்

குடும்ப அமைப்பை நிலைப் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம், உருவாகி வந்து கொண்டிருக்கிற புதிய நாகரிகமாகிய ‘குடும்பம்’ என்ற புதிய வாழ்க்கைமுறையை நிலைபேறு அடையச் செய்யத்தான்.

குடும்பம் என்பது, ஒரு சிறிய அரசாங்கம். பெரிய அரசாங்கத்தின் சிறிய பதிப்பு அது. அங்கு அரசன். இங்கு குடும்பத் தலைவன். அங்கு அரசி. இங்கு தலைவி. அங்கு அரசுக்கு உரியவன் இளவரசன். இங்கு சொத்துக்கு உரியவர்கள் குழந்தைகள். இந்தக் குடும்பம் என்ற அமைப்பில்தான் ‘ஆண் தலைமை’ உருவாகிறது. (அது சரியா, தவறா? என்று ஆராயும் இடம் இதுவல்ல.) குடும்ப அமைப்பு நிலைபெற்ற பிறகுதான் திட்டவட்டமான சட்டமுறைகள், அமைப்புகள் கொண்ட அரசுகள் உருவாகின்றன.

சங்க காலத்திலேயே இந்திர வணக்கம் இருந்திருக்கிறது. இந்திரன், பெரிய கடவுளாக இருந்திருக்கிறான். இந்திரனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் சங்கத் தமிழர்களிடம் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில், ஓரம் போகியார் எழுதிய மருதம் தொடர்பான பாடலில் இந்திர விழா பற்றி வந்துள்ள செய்தி இது:

இந்திர விழாவிற் பூவின் அன்ன புன்தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ன நின் தேரே& என்பது அந்தப் பாடல்.

இந்திர விழாவுக்குப் பலவிதமான பூக்களைத் தருவித்துத் தொகுத்தாற்போல, இவ்வூர் மங்கையரைத் தொகுத்து ஆடல் பாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது இப்பாட்டின் சுருங்கிய பொருள்.

இந்திரவிழா கொண்டாடப்-படுவதன் நோக்கம், முதல் நோக்கம் மழை. மழைக்குக் கடவுளாகிய இந்திரனை விழா எடுத்து வணங்கி அவன் அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகினால், நாட்டில் பசி மறையும். வளம் பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதாகும். அதனால்தான் பொங்கலுக்கு முதல்நாள் இந்திரனாகிய போகிக்கு (போகிபோகம் துய்ப்பவன்) ஒதுக்கப்பட்டது.

மருத நிலத்து வேந்தன், இந்திரன் வழிபாடு இவ்வளவு சிறப்பாக நடந்த நாட்டில், அது வழக்கமற்று மறைந்து போகக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. சிலப்பதிகாரம் அதற்குப் பிந்தைய மணிமேகலை காலத்திலும், கி.பி. 5ம், 6ம் நூற்றாண்டு வரை இந்திர வணக்கம் பெரு வழக்காக இருந்து வருகிறது. பின் ஏன் மறைந்தது?

அறிஞர் குருசாமி சித்தர் களப்பிரர் மற்றும் வடுகர் ஆட்சிக் காலங்களில் சமய தளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் வாழ்க்கை முறை மாறியது என்கிறார். உண்மைதான். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சைவ, வைணவ மதங்கள், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டன.

வைணவ மதக் கடவுளான கண்ணன், இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடை செய்கிறான். இந்திரன் கோபம்கொண்டு, ஊரை அழிக்கும் மழையை, புயலை அனுப்புகிறான். கண்ணன், கோவர்த்தனகிரி மலையைத் தூக்கிப் பிடித்து, மக்களைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அழித்தான் என்கிற கதை இந்திர மதத்துக்கும், வைணவத்துக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தின் கதைதான். சங்க காலத்துக்குப் பிறகு, குறிப்பாக சோழப் பேரரசர்கள் காலத்தில் அரசர்களின் ஆஸ்தான புரோகிதர்களாக அமர்ந்த பிராமணர்கள், ராஜகுருக்களாக விளங்கி, தமது பூர்வ வைதீகத்தை விடுத்து, சைவம், வைணவம் சார்ந்ததும், மள்ளர்கள் வேத மதங்களான சைவ, வைணவத்தை ஆதரித்ததும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.

மிகப் பெரிய கோயிலைக் கட்டச் சொன்னார் ராஜ-ராஜனிடம், அவன் ஆசிரியரும் ராஜகுருவும் ஆன கருவூர் தேவர். இதன் காரணம், கோயில் மிகப் பெரிதாய் இருப்பதன் குறியீடு, மற்ற மதங்களைவிடவும் சைவம் பெரியது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தத்தான். வைணவத்துக்கும் இது பொருந்தும். இந்திரனின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்ட வேந்தர்கள், சிபியின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்டார்கள்.

தமிழரின் சமயம், வாழ்க்கையோடு இணைந்த, மிக இயல்பான மிக எளிமையான சமயம். வாதங்கள், தத்துவங்கள் இல்லாத மகிழ்ச்சி தரக்கூடிய சமயம். தமிழர்களே அடிப்படையில் இன்ப நாட்டம் உடையவர்கள். அன்பும், காதலும், மிக இயற்கையாக வெளிப்பட்ட சண்டையும், போரும், போருக்குப்பின் சமாதானமும் என்று மிகச் சாமான்ய, அதேசமயம் மிக எளிமையான சமூகம் இது.

மிகக் கடுமையான சண்டையும் மிகக் கடுமையான அன்பும் கொண்ட, தூய்மையான மனமும் இயற்கையாகிய வாழ்வும் கொண்ட மகத்தான இனம் தமிழினம். வடநாட்டிலிருந்து வந்த சமயங்களும் உள்நாட்டுச் சமயங்களும் அவர்கள் வாழ்க்கை என்ற குளத்தில் கல் வீசி அவர்கள் அமைதியக் கெடுத்தன.

என்றாலும் மள்ளர்கள் பலருக்கே அவர்கள் வரலாறு தெரியவில்லை. அவர்கள் விளைவித்த நெல் மணிகளின் குவியல்தான், ஒரு காலச்சக்கரத்தையே கட்டி எழுப்பியது. தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று தமிழரின் பெருமைகளாகப் பேசப்படுவது எல்லாம் தமிழ் உழவர்களின் கலாசாரம்தான் என்பதே உண்மை. நெற்களம்தான் தமிழ்க் களம். நெல் என்பதே சொல்லும் ஆயிற்று. நீர் என்பதே நீர்மை ஆகி, அன்பாயிற்று. வரப்பு என்பதே வரம்பாகி, சட்டம் நீதி ஆயிற்று. விளைச்சல் என்பதே சமூக வளர்ச்சி என்று ஆயிற்று. உழப்பட்டதுக்கே நிலம் என்று பேர். உழப்படாதது வெறும் மண்தான். உழவர்களே சகல முன்னேற்றத்துக்கும் அச்சாணி.

சரித்திரம் தொடர்கிறது.






பிரபஞ்சன்

மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு

எழுதப்படாத சரித்திரம் 28
‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’’




‘தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.

மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்.

காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின.

நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.

‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.

இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.

‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.

நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?

யார் இந்த தேவேந்திரன்?

ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார்.

உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.

வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.

மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.

சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.

‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன்.

நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.

நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.

பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.

சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?

சரித்திரம் தொடர்கிறது








பிரபஞ்சன்

அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறலுழவர்க்கும்

Pallar
From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search
Mallar/Devendra Kula Vellalar Immanuvel tiger2.jpg MaaveeranSundaralingaDevendrar8.jpg Devaneya1988.jpg
Porali Immanuvel Devendrar , Thalapathi Sundaralinga Devendrar, Devaneya Pavanar
Total population
1.5 crore
Regions with significant populations
Tamil Nadu, Karnataka, Kerala, Sri Lanka
Languages

Tamil
Religion

Atheism, Hinduism, Christianity, Islam
Related ethnic groups

Tamil people

Pallar(Tamil:பள்ளர்) or Mallar(Tamil: மள்ளர்) is a caste from the Indian state of Tamil Nadu. They are mostly agriculturalists in Tamil Nadu, Sri Lanka and amongst the Tamil diaspora[1]. They are also known as Devendra kula Vellalar. Pallars also suffix the title Kudumban after their names.
Contents
[hide]

* 1 Origin
* 2 Mallar
* 3 History
* 4 Marutam land
* 5 Tamil Literature referring to Mallars
* 6 List Of Scholars Who Say Pallars Are The Mallars
* 7 Ongoing Struggle For Name Change
* 8 In Sri lanka and abroad
* 9 Genetics
* 10 Notable people
o 10.1 Cine Field
o 10.2 Freedom Fighters
o 10.3 Scholars
* 11 References
o 11.1 Notes
o 11.2 External links

[edit] Origin

Devendra Kula Vellalar are an ancient people group belonging to the Marutam land.They claim themselves to be the descendents of Lord Indra(the god of Marutam land).They also claim to be the first cultivators of rice in Tamilnadu.So they call themselves as Devendra Kula Vellalar[2][3].
[edit] Mallar

Mallar is a name which denotes the people of the Marutam land.The name Mallar is present in all Tamil Literature from ancient times.The name Mallar denotes a group of people who are Warriors and Farmers[4][5].This can be proved by the following examples.


An example from Thivagara Nigandu(9th century Tamil dictionary) giving meaning for the word Mallar as Warriors and Farmers:
“ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறலுழவர்க்கும்
வருந்தகைத்தாகும் 'மள்ளர்' எனும் பெயர்" ”

—-திவாகர நிகண்டு


An example from pingala nigandu(dictionary) giving meaning for Mallar as Warriors and Marutam land(Agriculture land) people:
“ "செருமலை வீரரும் திண்ணியோரும்
மருதநில மக்களும் 'மள்ளர்' என்ப" ”

—-பிங்கல நிகண்டு
[edit] History
Mallar and Mallathi

Mallars were the great kings(moovendar) and professional worriors [6]. The word Pallar is a corruption of Tamil word Mallar[7]. It is possible that the Pallava rulers belonged to this people[8]. They also served the Pallava army[9]. Most of the ancient temples in and around Tamilnadu were built and owned by this community. After the invasion of Nayak Kings and Maratha Kings, the Pallars were deprived of their land and were made as agricultural labourers in their own farms for which they were the then owners.

Devendrakulam is the name of a caste in India. The members of the caste claim they have this name because they are the descendents of Lord Indra, King of the Devas. Majority of the people of this caste are involved in agriculture. The people of this caste are also called by Palla, Pallan, Kudumban, kaaladi, Pannadi, Devendrakulla Vellalar. Though People of this caste claim superiority of their origin, the caste is included in the Scheduled Caste and many of its members were held as agriculture slaves and bonded agriculture labourers during the 17th Century until mid 20th Century.

Extensive research done by Dr.K.R.Hanumanthan and Tamil research scholar Deva Asirvatham and later by Dr.Guruswamy Sidhar indicate that the people of this caste are the scions of Chera, Chola, pandiya and Pallavas who ruled the current Tamilnadu, Part of Andhra Pradesh during ancient period and ruled Tamilnadu up to the 16th Century[10]. After the invasion of Vijaynagar Empire and Marata Kings, the Tamil Kings and their community were removed of their title, land and were made as agricultural labourers in their own farms for which they were the then owners. To hide this Historic fact these people who were then called as Mallar (Malla, Mallan) were named as Pallar (Palla, Pallan) and many poems were written during 17,18,19 and beginning of 20th Century in the name of Pallu Poems' with the encouragement from Vijayanagar (Nayak) dynasty[11]. Before that period the People were called as Mallar Meaning warrior, Oolavar meaning plougher (farmer) and Vellalar meaning great gift giver. These people were regular farmers and land lords during peace time (Oolavar) and warriors (Mallars) during war time.

The Sangam poems written before 1 century BC mentions about the Gods Lord Shiva, Goddess Umadevi, Lord Tirumal (Lord Vishnu), Goddess Lakshimi, Lord Brahma, Goddess Saraswati, Lord Muruga (Lord Karthik), Lord Vinayega (Lord Ganesh), Lord Indra were Mallar.

Though the Pallu Poems denigrated the Mallar and called them as Pallar, they also say that Pallar's ancestors were Mallar's. During 16th Century AD, Nayak King passed a law ordering people not to have any contact with the Pandian dynasity (in general with Mallar's) and prevented the 18 communities that supported the Tamil Kings from having contact with one another and from inter-marriage between these communities. (This was the origin of Untouchability and modern caste division in Tamilnadu). The Mallar's were ex-communicated, then gradually over the next 300 years, their lands were removed and given to other new formed upper castes that were loyal to Telugu Kings. The Mallar's were named as Pallar's and were made as agricultural labourers in the land in which they were once owners. Then after a few generations they were made as bonded labourers and then were removed of all basic human rights (Prevented from having education, access to public places and Temples built by their own ancestors, prohibition from wearing Ornaments and dress on the upper part of the body, shoes etc.).

To hide the truth that all Temples built up to 16th Century AD were built by the ancestors of these people, attempts were made to hide Temple Paintings by redrawing new paintings on the old ones (Tanjavur Periya Koyil, Mariamman Koyil). During 1932 when British gave self-autonomy to Indians, 1000s of new castes sprung up claiming superiority on one over the other. Several actions were directed by other communities to keep the Pallar's at a low profile for fear of the other communities (new formed higher castes) losing their claim for high caste and land ownership. In 1957 the Pallar, Devendrakula Vellalar Community was included to the Scheduled Caste by Kamaraj, then Chief minister of Tamilnadu, owing to the poverty of the community.

Day-to-day activity shows evidence of the rich heritage these people had from ancient times. The community people have their own village self government (Panchayat), have special priests for Temples, Barbers, Dobbies, Doctors etc. in villages. These people also have their own temples that are called as King Temples. They are also the priests in village Temples, exclusively owned by these people. In ancient temples like Perur, Samayapuram, Tirunelveli and so on, leaders of this community are brought to the Temple with festivities on Elephant with White Umbrella coverage, playing trumpts and drums and given the first respect during Temple festivals and are asked to touch the TempleCaravan (Thear) first before it comes on procession. These were the privileges only the ancient Tamil Kings had and were passed on to their descendents that still continues. Priests of these ancient Temples accept and agree that the ancestors of DevendraKulathar are the ancient Tamil Kings namely Chera, Chola, Pandiya.There are ownership documents (Pattayam signed during 1500s) that show that the Palani Murugan Temple and numerous ancient Temples belong to people of Devendrakulam. These ancient Temples were built by ancient Tamil Kings thus these documents and respect given to people of this community at these temples bridge the relation between the ancient Kings and the Devendrakula community.
[edit] Marutam land
Main article: sangam landscape
Paddy fields in present day Tamil Nadu

Marutam is one of the five lands of ancient Tamil country.It is a fertile land suitable for Agriculture.It was present near the Rivers.Like all the civilizations around the world which were present near the rivers,the Marutam land gave birth to the Tamil Civilization.Mallars were the people who lived in the Marutam land.Their God was Vendan or Indran.They were Farmers and Warriors[12] .
“ மருதம் - தலைவி கூற்று
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே ”

—-ஆதிமந்தியார்(குறுந்தொகை).
[edit] Tamil Literature referring to Mallars
See also: Tamil literature
See also: Sangam literature

Mallars are mentioned in Tamil literature from the ancient Sangam Literature to the recent 19th century poems, including Purananuru, Kamba Ramayanam, Thirumurukkatruppatai, Silapathigaram, Agananuru, Pathirtrupattu, Kurunthogai, Aingurunooru, Kalithogai, Natrinai, and Paripaadal.

The name Pallar is mentioned only in pallu poems and later poems.Both the names Pallar and Mallar denotes the same people.This can be proved by the following example.[13].

An example from mukoodar pallu:
“ "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
பள்ளக் கணவன்" ”

—-முக்கூடற்பள்ளு(பாடல்-13)

The Tamil poems which says that both the names Pallar and Mallar denotes the same people are mukoodar pallu,vaiyapuri pallu,sengottu pallu,peerur puranam and thandigai kanagaraayan pallu.
[edit] List Of Scholars Who Say Pallars Are The Mallars

* M.Srinivasa Iyangar[14].

* Dr.Winslow[15].

* T.K.Velupillai[16].

* Dr G.Hobart[17].

* Mozhignayiru Devaneya pavanar[18].

* Pandit savarirai[19].

* Dr K.R.Hanumanthan[20].

* A.V.Subramaniya Iyer[21].

* Thiru R.Deva Asirvatham[22].

* veeramamunivar[23].

* Thiru Prabhanjan[24].

The following books are written about Mallars.
[show]

Reference Books

Dev Veel.jpgMallaram Mannar.jpg Moovendar.jpg
Tamil Elakia Malar.jpgVella yaar.jpgDevendrarmeel.jpgMaruthamallar.jpg
[edit] Ongoing Struggle For Name Change

The people of this caste does not want themselves to be called by the name Pallar.Because the name Pallar which is used to denote these people nowadays was introduced in the 17th century by the nayak kings to discriminate them.Before that they were called by the name Mallar.The people of this caste want their name to be called as Devendra Kula Vellalar.In order to make the Government change their name from Pallar to Devendra Kula Vellalar the people of this caste are undertaking many peaceful struggles in Tamilnadu like hunger strike,peaceful rally,etc.The people of this caste are also demanding the Tamilnadu government to change the name Adi Dravidar(which is used to denote the people of Scheduled caste in Tamilnadu) to Pattiyal Saathiyinar(which is the Tamil Translation for the English word Scheduled caste).Because Adi Dravidar is the name of a caste which is present in the Scheduled caste list.In the list many other caste are also present including Pallar caste.
[edit] In Sri lanka and abroad

In Sri Lanka, M(P)allar are currently found in Jaffna and eastern Batticalo region and were primarily agricultural workers. But there is evidence that some have assimilated with the dominant Vellala caste over the last 100 years. They have played and important role in the formation many Tamil nationalistic militant groups namely EPRLF that was eventually eclipsed by the more militant LTTE. Today amongst the Tamil diaspora across the world M(P)allars are found as part of the greater Tamil community and caste distinctions are minimal.[25] In Sri Lanka, M(P)allar have formed an important component in rebel groups after the civil war.
[edit] Genetics

According to Sengupta et al., 2006 study M(P)allars have Y-chromosome-Haplogroups that show a curious mix of South Asian haplogroups. Their biggest lineage is R1a1 which forms 24% of their male population. This Y-chromosome lineage predominates North-West of the Indian subcontinent. They also have L1 and L3 where L1 is one of the most common Haplogroup in South India with an appreciable presence in North India and Pakistan, L3 is mostly observed among Pakistanis and almost absent among South Indians. Other pan-Indian Haplogroups like H, R2 and J2 are observed at frequencies greater than 10%.[26]
[edit] Notable people

* Samuga Urimai Porali Tyagi Immanuel Sekaran

* Thekkampattu Balasundararaju

* M.Arunachalam(an Indian politician and former Member of Parliament)

* A.Tamilarasi(present Minister for Adi-Dravidar and Tribal Welfare in Tamil Nadu state of India)

* Dr K.Krishnasamy(Founder of Puthiya Thamizhagam Party)

* Thalapathy John Pandiyan(Founder of Tamizhaga Munnetra Kazhagam)

* C.Pasupathi Pandiyan(Founder of Tamil Nadu Devendra Kula Velalar Kootamaippu)

* Justice L.Thamburaju M.A;B.L; SENIOR JUDGE

* Justice S. Ashok Kumar

[edit] Cine Field

* John Kennedy Victor aka Vikram, Tamil film star

* Ponnambalam, actor

[edit] Freedom Fighters

* Maaveeran Sundaralinga Kudumbanar

* Tyagi Mohanavalli vadivu

* Maaveeran Venni Kaaladi

[edit] Scholars

* Mozhinayiru Devaneya Pavanar

* Thiru R.Deva Asirvatham

* Thiru Gurusamy Siddhar

[edit] References

1. ^ Edgar Thurston, The Tribes and Castes of Southern India (7 vols)
2. ^ Mannar Uruvana 'Mallar' Varalaru
3. ^ http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45
4. ^ Pallar alla Mallar aam Mannar (Not Pallas but Mallas, Yes Kings) by Thiru.R.Deva Asirvatham
5. ^ Tamil Elakiyathil Pallar yendra Mallar, Devendrakula Vellalar ( Adipadai Saandrugal). (Tamil Literature portraying Pallar alias Mallar, Devendrakula Vellalar (Basic Facts)) by Thiru Gurusamy siddhar
6. ^ Śaṅgam polity: the administration and social life of the Śaṅgam Tamils
7. ^ Dalits in Dravidian land: Frontline reports on Anti-Dalit violence in Tamil by S. Viswanathan (Journalist)
8. ^ Caste system: myths, reality, challenge by Sachchidanand Sinha
9. ^ Political Change and Agrarian Tradition in South India
10. ^ Moovendar Yar (Who are the Three Kings) by Thiru.R.Deva Asirvatham
11. ^ Pallar alla Mallar aam Mannar by Thiru.R.Deva Asirvatham
12. ^ Tamil Elakiyathil Pallar yendra Mallar, Devendrakula Vellalar ( Adipadai Saandrugal). (Tamil Literature portraying Pallar alias Mallar, Devendrakula Vellalar (Basic Facts)) by Thiru Gurusamy siddhar
13. ^ Thiru Gurusamy Siddhar. Tamil Elakiyathil Pallar yendra Mallar, Devendrakula Vellalar (Adipadai Saandrugal) [Tamil Literature portraying Pallar alias Mallar, Devendrakula Vellalar (Basic Facts)].
14. ^ Tamil Studies By M.Srinivasa Iyangar
15. ^ Dr.Winslow Dictionary,PP.745
16. ^ Travancore State Manual,1940 By T.K.Velupillai
17. ^ Dravidans,The Original Inhabitants of India,PP.101 By Dr G.Hobart
18. ^ Senthamizh Selvi 1975 April Release
19. ^ N.C.Kanthaiyapillai,Tamilar Sarithiram,Page 206
20. ^ Untouchability,A Historical Study,PP.100 By Dr K.R.Hanumanthan
21. ^ Tamil Studies,Part 2,PP.67 By A.V.Subramaniya Iyer
22. ^ Pallar alla Mallar aam Mannar (Not Pallas but Mallas, Yes Kings) by Thiru.R.Deva Asirvatham
23. ^ Thembhavani,Naatupadalam,cheyul 32
24. ^ Mannar Uruvana 'Mallar' Varalaru
25. ^ Caste, the last frontier by Prof. S. Ratnajeevan H. Hoole
26. ^ Mitochondrial unity of India’s castes

* http://www.qeh.ox.ac.uk/pdf/qehwp/qehwps82.pdf

[edit] Notes

1. Moovendar Yar (Who are the Three Kings)
2. Pallar alla Mallar aam Mannar (Not Pallas but Mallas, Yes Kings)
3. Tamil Elakiyathil Pallar yendra Mallar, Devendrakula Vellalar ( Adipadai Saandrugal).
4. India’s Religious Pluralism by Barbarra Harris White

[edit] External links
Wikimedia Commons has media related to: Mallar

* http://devendrakural.tk
* http://www.thevendrar.in
* http://www.devendrakulam.org
* http://www.maruthamalar.com.co.in
* http://www.geocities/mallarmalar.com
* http://www.pallar.org
* http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43
* http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45
* http://www.mallarnadu.com/index.php
* http://www.ptparty.org/

Retrieved from "http://en.wikipedia.org/wiki/Pallar"
Categories: Sri Lankan Tamil caste | Social groups of India | Social groups of Tamil Nadu
Hidden categories: "Related ethnic groups" needing confirmation
Personal tools

* New features
* Log in / create account

Namespaces

* Article
* Discussion

Variants

Views

* Read
* Edit
* View history

Actions

Search
Search
Navigation

* Main page
* Contents
* Featured content
* Current events
* Random article

Interaction

* About Wikipedia
* Community portal
* Recent changes
* Contact Wikipedia
* Donate to Wikipedia
* Help

Toolbox

* What links here
* Related changes
* Upload file
* Special pages
* Permanent link
* Cite this page

Print/export

* Create a book
* Download as PDF
* Printable version

Languages

* தமிழ்

* This page was last modified on 26 July 2010 at 17:36.
* Text is available under the Creative Commons Attribution-ShareAlike License; additional terms may apply. See Terms of Use for details.
Wikipedia® is a registered trademark of the Wikimedia Foundation, Inc., a non-profit organization.
* Contact us

குழந்தைப்பருவ தேவேந்திரர் இயக்கம் -கோ.ரகுபதி

இந்து சமூக அமைப்பினால் தீண்டாமை உட்பட பல்வேறு வகையான ஒடுக்குமுறைக்கு உள்ளானோர்களில்பள்ளர், குடும்பர், தேவேந்திரர், மள்ளர் என பல பெயர்களில் அழைக்கப்படும் சாதியின ரும் அடங்குவர்.தீண்டாமை உட்பட பல்வேறு சமூக ஒடுக்குமுறை குறித்து குறிப்பிடத்தக்க அளவிற்குவிவாதிக்கப்பட்டிருக்கிற காரணத்தி னால் பள்ளர்கள் (இனி, தேவேந்திரர்கள்) மீதான ஒடுக்குமுறையை இங்குவிவாதிப்பதனை தவிர்த்துவிட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான இயக்கங்களைத் தோற்றுவித்தல்,அவற்றின் கருத்தியல் மற்றும் போராட்டம் இவற்றினை குறித்து விவாதிக்கலாம். சாதி அமைப்பு, தீண்டாமைமற்றும் சமூக ஒடுக்குமுறையினை இந்து மத கருத்தியல் நியாயப்படுத்துகின்ற காரணத்தினால் அதனைஒழிப் பதை இயல்பாக தன்னகத்தே தலித் இயக்கம் கொண்டிருக்கிறது என்ற எண்ணமேமேலோங்கியிருக்கிறது. உண்மையில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளான தலித் சாதிகளின் அனைத்துஇயக்கங்களும் இந்து மதம் மற்றும் சாதி ஒழிப்பு, இந்து மதத்திற்கு எதிரான மாற்று மதத்தினைதோற்றுவித்தல் என்ற இலக்குகளை கொண்டிருந்தன என்று கூறிவிட முடியாது. அவ்வாறென்றால்அவ்வியக்கங்கள் இருக்கின்ற அமைப்புமுறையினை அவ்வாறே ஏற்றுக்கொண்டனவா என்ற கேள்வியும்எழுகிறது. தேவேந்திரர் சாதியின் இயக்கச் செயல்பாடுகளை ஆராய்ச்சிக்குட்படுத்தினால் அவ்வியக்கம் சாதிஒழிப்பு, இந்துமதத்திற்கு எதிரான மாற்று மதம், இந்துமத ஒழிப்பு இவற்றினை இலக்காகக்கொண்டிருக்காததைக் காண முடிகிறது. இதனால் அவ்வியக்கம் ஏற்றத்தாழ்வினை வலியுறுத்து கின்ற- இந்துசாதி படிநிலை அமைப்பில் தனக்கொரு மேலான நிலை யினைக் கோரியது என்றோ அல்லதுசமூகவியலாளர் எம்.என். ஸ்ரீனிவாஸ் வார்த்தையில் ''சமஸ்கிருதமயமாக்கம்'' நிலைபாட்டினைக்கொண்டிருந்தது என்றோ கூறுவதும் இயலாது.




இயக்கம்: தோற்றக் காரணி, தலைமை & பங்கேற்பு



வர்க்க முரண், சமூக ஒடுக்குமுறை போன்ற காரணிகளே சமூக இயக்கங்கள் உருவானதற்கான அடிப்படைஎன்று சமூகவியலா ளர்கள் கருதுகின்றனர். பறையர், அருந்ததியர் போன்ற சாதியினர் அனு பவித்து வந்தஅதே ஒடுக்குமுறையினை தேவேந்திரர்களும் அனு பவித்து வந்ததே தேவேந்திரர் இயக்கங்கள்உருவாவதற்கான அடிப்படைக் காரணியாகும். காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்கள் சுமார் 10அமைப்புகளின் கீழ் திரண்டிருந்தனர். இவை மாவட்டத்திற்குள் ளேயே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரேமாவட்டத்திற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகளும் இருந்தன. ஏன் தேவேந்திரர்கள் ஒரே குடை யின் கீழ்ஒன்று சேர்ந்திருக்கவில்லை என்ற கேள்விக்கு சில விடை களைக் காணலாம்.

விவசாயம் என்ற ஒரே தொழிலினைச் செய்தபோதிலும் தேவேந்திரர் களிடத்தில் ஆத்தா, அம்மா, அஞ்ஞா எனபல உட்பிரிவுகள் உண்டு. நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு (பள்ளர்) வகையை எண்ண இயலாதுஎன்ற சொலவு புழக்கத்தில் இருப்பதிலிருந்து தேவேந்திரர் களிடம் இருக்கின்ற உட்பிரிவுகளை புரிந்துகொள்ளலாம். ஒரு உட்பிரிவு மற்றொரு உட்பிரிவினரோடு திருமண உறவினை மேற்கொள்வ தில்லை.மட்டுமின்றி இந்த உட்பிரிவிற்குள் ஏற்றத்தாழ்வான கருத்தியல் கள், பாகுபாடு மற்றும் வட்டார வேறுபாடுபோன்றவை மிக ஆழமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. இது அவர்களை ஒரே குடையின் கீழ்அணிதிரள்வதைத் தடுத்தது, அவரவர் சார்ந்த உட்சாதிகளின் அமைப்பு களிலேயே இணைந்திருந்தனர்.அமைப்புகளின் தலைமைத்துவத்தினை நோக்கும் பொழுது அவர்கள் பங்கேற்பாளர்களைவிடவும்கல்வித்தகுதி, பொருளாதாரத்தில் சற்று முன்னேறியிருந்திருப்பதைக் காணமுடிகிறது. பங்கேற்பாளர்கள்பெரும் பாலும் பண்ணை அடிமைகளாகவும், கூலிகளாகவும் இருந்திருக்கின்ற னர். இவ்வமைப்புகள்பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் செயல் பட்டிருக்கின்றன.அதேசமயம் நகரத்தோடு தொடர்பு வைத்திருந்தன. பல அமைப்புகள் குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டிருக்கின்றன, நீண்ட காலம் செயல்பட்டஅமைப்புகள் அரிதாகவே இருந்திருக்கின்றன. தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையில் வெவ்வேறுஅமைப்புகளில் ஒருங்கிணைந்திருந்த போதிலும் அவர்களின் கோரிக்கை ஒன்றாகவே இருந்திருக்கின்றன.

அமைப்புகள் & மாநாடுகள்

ஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் சேகரித்தத் தரவுகளிலிருந்து காலனியாட்சிக் காலத்தில்தேவேந்திரர்களுக்கென சுமார் 10 சங்கங்கள் செயல்பட்டிருப்பதனை அறியமுடிகிறது. இராமநாதபுரம்மாவட்டம் பேரையூரில் பெருமாள் பீற்றர் தலைமையில் இயங்கிய சங்கம்தான் தேவேந்திரர்களின் முதல்சங்கம் என்று இதுவரை நிலவிவந்த வரலாறு தவறானது என்பதை ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டஆதாரத் திலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. இந்த ஆதாரம் பெருமாள் பீற்ற ருக்கு முன்னரேதேவேந்திரர்கள் மாநாடு நடத்தியிருக்கின்றனர் என்பதனை தெரிவிக்கிறது. திருச்சிராப்பள்ளிஸ்ரீராமசமுத்திரத்தில் 1922ம் ஆண்டு மே மாதம் 20 - 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற திருச்சி ஜில்லாஉழவர்குல மாநாடுதான் தேவேந்திரர்களின் முதல் மாநாடு ஆகும்.1 இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21தீர்மானங்க ளில் அவர்களுக்கென அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மான மும் அடங்கும்ஆனால் மாநாடு நிறைவுற்ற பின்னர் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. மேலும் அமைப்பும்உருவாக்கப்பட்டி ருக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1925ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியில் ஒருமாநாடும்2, 1931ம் ஆண்டும் மீண்டும் ஒரு மாநாடும்3 திருச்சிராப்பள்ளியில் தேவேந்திரர்கள்நடத்தியிருக்கின்றனர். இந்த மூன்று மாநாடுகளை நடத்தியவர்களுக்கு இடையே தொடர்பு இருந் தது அல்லதுஇல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் 1922 மற்றும் 1925ம் ஆண்டுகளிலும் 1931ம்ஆண்டிலும் நடைபெற்ற மாநாட்டினை ஒருங்கிணைத்தவர்கள் முறையே தேவேந்தி ரர்களில் மூப்பன் மற்றும்தேவேந்திரர் என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவு செய்யலாம். காரணம் அவர்கள் தங்கள்பெயர்களின் பின்னொட்டாக மூப்பன், தேவேந்திரர் என்ற உட்சாதி பெயரினையும் சேர்த்திருக்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளர்கள் ஒருமாநாட்டை 23 மார்ச் 1936 தேளூரில் நடத்தியிருக்கின்றனர்.4 இவர்கள் எந்த உட்சாதி யினைச் சேர்ந்தவர்கள்என அறிந்து கொள்ள இயலவில்லை. 1920 களில் சேலம் பகுதியில் ஒரு சங்கம் இருந்திருக்கிறது.5பண்ணாடி என்ற தேவேந்திரர் உட்சாதியினரால் அச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிரவேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தென்தமிழகமான திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்,மதுரை, தேனி மாவட்டங்களில் சுமார் ஏழு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின் றன. 1922 ஆகஸ்டில்பெருமாள் பீற்றரால் தொடங்கப்பட்ட பூவைசிய இந்திரகுல சங்கம் காலனியாட்சிக் காலத்தில் நீண்டகாலம்செயல்பட்ட இயக்கமாகும்.6 இதே மாவட்டத்தில் தேவேந்திரகுல மகாஜன சபா சார்பில் 20-21 ஜூன் 1925ல்ஒரு மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.7 பூவைசிய இந்திரகுலம் மற்றும் தேவேந்திரகுலம் என்ற வெவ்வேறுபெயர்களில் ஆனால் ஒரே மாவட்டத்திற்குள் இரண்டு சங்கங்கள் செயல் பட்டிருப்பதிலிருந்து தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையிலேயேதான் ஒருங்கிணைந்திருக்கின்றனர் என்ற முடிவினை மேலும் வலுப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் (இப்பகுதி அன்றைய காலத்தில் திருவாங்கூர்சமஸ்தானத்தின் எல்கைக்குள் இருந்தது) பாண்டியர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை 1924ம்ஆண்டு தோற்றுவித்து செங்கோட்டை தாலுகா அளவிலேயே செயல்பட்டிருக்கின் றனர்.8 1946ம் ஆண்டுஒருமாநாடு நடத்தியதைத் தவிர அந்த அமைப் பின் இதர செயல்பாடு குறித்த எந்தத் தரவும் இல்லை.திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இந்திரகுலாதிப வேளாளர் அய்க்கிய சங்கம் 1933ல் ஆரம்பிக்கப்பட்டுஅதற்கென தெளிவான அமைப்புவிதிகள் உருவாக்கப் பட்டிருந்த போதிலும் அச்சங்கம்செயல்பட்டிருக்கவில்லை.9 தேனி பகுதி யில் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்ற ஒரு அமைப்புஇருந்திருக் கிறது. இதன் தலைவராக இருந்த பாலசுந்தரராசு தேவேந்திரர்கள் மீதான ஒடுக்குமுறைக்குஎதிரான பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.10 சமத்துவத்துவம் கோரி கேரளாவில் நடைபெற்றபோராட்டத்தினால் ஈர்க்கப்பெற்ற கம்பம் பகுதி தேவேந்திரர்கள் சமத்துவம் கோரி போராடி னர், ஆனால்அவர்கள் அமைப்பு எதுவும் தொடங்கியிருக்கவில்லை”

இலக்கும் செயல்பாடும்

ஒரு சமூக இயக்கத்தின் இலக்கு என்பது 1) அவ்வியக்கம் ஒருங்கிணைக் கின்ற மக்களின் சமூகப்பொருளாதார நிலையினை உயர்த்துவதாக இருக்கலாம் 2) இருக்கின்ற சமூக அமைப்பு முறையைமாற்றுவதன் மூலம் அனைத்து மக்களுக்குமான விடுதலையோடு தனது மக்களுக்கு மான விடுதலையைஅடைவதற்கு முயற்சிக்கலாம்.

பெரும்பாலான சாதி இயக்கங்கள் நிலவுகிற சமூக அமைப்பில் தமது மக்களின் நிலையினைஉயர்த்துவதையே இலக்காகக் கொண்டு செயல் பட்டிருக்கின்றன. தலித் இயக்கங்களில் ஒருசில சாதியினர்சமூக அமைப்புமுறையினை தலைகீழாய் மாற்றுவதை, அதாவது சாதி ஒழிப்பு என்ற புரட்சிகர இலக்கினைக்கொண்டிருக்கின்றனர். தேவேந்திரர் அமைப்புகள் நிலவும் படிநிலை அமைப்புமுறையினை ஒழிப்பதைஇலக்காகக் கொண்டிருந்தனவா அல்லது நிலவுகிற சமூக அமைப்பின் படிநிலையில் தமது நிலையினைமேலே உயர்த்திக்கொள்வதற்கு முயற்சி செய்தனவா அல்லது தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தம்மைமுன்னேற்றிக் கொள்வதற்காகப் போராடினவா? தேவேந்திரர் அமைப்பு களின் நோக்கம் மற்றும் அவர்கள்நடத்திய மாநாடுகளில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களிலிருந்து மேலேயுள்ள கேள்விகளுக்கானபதில்களைக் காண்போம்.

அனைத்து தேவேந்திரர் இயக்கங்களின் இலக்கும் ஒன்றுக்கொன்று குறிப்பிட்டுக்கூறும்படிவேறுபட்டிருக்கவில்லை மாறாகா அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மை இருக்கின்ற காரணத்தினால்ஒவ்வொரு தேவேந்திரர் இயக்கத்தின் நோக்கத்திலிருந்து ஒரு முடிவுக்கு வருவதனை விடவும் அனைத்துஅமைப்புகளின் நோக்கத்திலிருந்தும் ஒரு முடிவினை எட்டுவதற்கு முயற்சிக்கலாம்.

பொதுவெளிகளை அணுகுதல்

தலித்துகள் மற்றும் பெண்கள் உட்பட ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு சாதியினைச் சேர்ந்தவர்கள் ஒருஇடத்தில் ஏதாவது ஒரு தேவைக்காக அல்லது காரணத்திற்காக சங்கமிக்கின்ற இடத்தினை பொதுவெளிஎன்று வரையறுக்கலாம். இத்தகைய பொதுவெளி பெரும்பாலும் அரசாங்கத் தின் நிதியுதவியால்உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது பராமரிக்கப்பட லாம். பொதுசாலை, கட்டிடம், பள்ளிக்கூடம், நீதிமன்றம்,அஞ்சலகம், பேருந்து போன்றவற்றினை பொதுவெளிக்கான உதாரணமாகக் கொள்வோம். இவற்றினைஅணுகுவதிலிருந்தும் அனுபவிப்பதிலிருந் தும் தலித்துகளும் பெண்களும் திட்டமிட்டே விலக்கபட்டிருந்தனர்.சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றால் தலித்துகள் முதலில்பொதுவெளிகளை அணுகுவதற்கும் அனுபவிப்பதற்குமான உரிமையைப் பெற்றாகவேண்டும். தேவேந்தி ரர்இயக்கங்கள், பொதுவெளிகளை அணுவதற்கும் அனுபவிப்பதற்கும் தலித்துகள் பாகுபாடின்றி அனுமதிக்கப்படவேண்டும் என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும், பேருந்து மற்றும் படகில் பயணிப்பதற்குஅனுமதி மறுக்கிற ஊர்திகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் தண்டம் விதிக்கவேண்டும்என்றும் வலியுறுத்தி யிருக்கின்றன.

அரசியல் பிரதிநிதித்துவம்

அரசியல் தளத்தில் தேவேந்திரர் இயக்கங்கள் காலனியாட்சிக் காலத்தில் செயல்பட்டிருக்கவில்லை என்றஎண்ணம் நிலவுகிறது. ஆனால் உள் ளாட்சி அமைப்பு முதற்கொண்டு சென்னை மாகணப் பேரவை வரையிலும் தேவேந்திரர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. மட்டுமின்றிவட்டமேசை மாநாட்டிற்கு தேவேந்திரர் சாதியினைச் சேர்ந்த ஒருவரை அனுப்ப வேண்டும் என்றும்கோரப்பட்டிருக்கிறது. இத்தகைய கோரிக்கைகள் தேவேந்திரர்களிடத் தில் அரசியலில் பங்கேற்பது குறித்தவிழிப்புணர்வு இருந்திருப்பதனைக் காட்டுகின்றன.

மேலும் காலனியாட்சிக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாடும் சுதந்திர இயக்கத்திற்கு எதிரான நிலைப்பாடும்தேவேந்திரர் இயக்கங்களிடம் இருந்திருக்கிறது. ஆனால் அனைத்து தேவேந்திரர் இயக்கங்களும் காலனியஆதரவு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டினை கொண் டிருக்கவில்லை. காங்கிரஸ் இயக்கம் மற்றும்காந்தியை ஆதரித்தல் என்ற நிலைப்பாடும் அவர்களிடம் இருந்தது. ஆனால் இதர தலித் இயக்கங்கள்அரசியல் போராட்டத்தில் ஈடுபட்ட அளவிற்கு தேவேந்திரர் இயக்கம் செயல்பட்டிருக்கவில்லை என்பதைக்காணமுடிகிறது.

மதுவருந்தக் கண்டனம்

மதுவருந்துதல் உடலுக்குக்கேடு விளைவிக்கிறது என்ற நோக்கில் எதிர்ப்பதனைவிடவும் ஒழுக்கக்கேடு என்றநோக்கிலேயே அது எதிர்க்கப் படுகிறது. மதுவருந்துதல் தலித் பண்பாடு என்றும் அதனை விட்டொழிப் பதுசமஸ்கிருதமயமாக்கம் என்றும் வாதிடப்படுகிறது. ஆனால் தேவேந் திரர் இயக்கங்கள் மதுவருந்துதலைகண்டித்திருப்பதோடு அதனை விட்டொழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றன. இதனால் இதனைசமஸ்கிருதமயமாக்கம் என்று கூறிவிட முடியாது. காரணம் சமீப காலங்களிலும்கூட தேவேந்திரர்களிடத்தில்மதுப்பழக்கத்தினை ஒழிப்ப தற்கான இயக்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவற்றின் நோக்கம்,பொருளாதாரத்தில் சார்புத்தன்மை ஒழிக்கப்பட வேண்டுமென்றால் மது வருந்துவதற்கென பணம் விரயம்செய்யப்படுவது முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. எனவே காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்இயக்கங்கள் மதுப்பழக்கத்தினை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தியது பொருளாதாரத்தில் சுயத்தன்மைக்கேஎன்றே புரிந்து கொள்வோம்.

கல்வி கற்றல்

சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்திக் கொள்வதற்கு கல்வி கற்பது தவிர்க்கவியலாதத்தேவை என்பதை இதர சாதியினர் உணர்ந்திருந்தது போல் தேவேந்திரர்களும் உணர்ந்திருந்தனர். வாசிப்புப்பழக்கமும் ஒப்பமிடலும் அவசியம் என்பதனை தேவேந்திரர் இயக்கங்கள் உணர்ந்திருக்கின்றன.கல்லாமையால் தேவேந்திரர்கள் அவர்களையே ஏமாற்றுகின்ற ஆவணங்களில் கைரேகை இடுகின்ற னர்,இதனால் சம்பந்தபட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என் பதை இயக்கங்கள் உணரத் தொடங்கின.எனவே, தேவேந்திரர் அமைப்புகளின் தலைவர்களது கூட்டு ஒப்பம் இல்லாத ஆவணங்களை அரசாங்கம்ஏற்றுக் கொள்ளக்கூடாதென வலியுறுத்தின. கல்லாமை யால் பாதிப்பும், ஒப்பமிடத் தெரியாததனைஅவமானமாகவும் உணர்ந்த இயக்கங்கள், தேவேந்திரர்கள் தமது பெயரினை ஒப்பமிட அறிந்தி ருக்கவேண்டும், தமது குழந்தைகளை கல்வி கற்பதற்கு அனுப்பவேண் டும் - இதற்காக அவர்களைநகர்ப்புறங்களுக்கு அனுப்பவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றன. திருச்சி ஜில்லா திராவிடர் உழவர்குலமாநாடு நிறைவேற்றிய ""சென்னை மாகாணத்திலுள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்விவழங்கவேண்டும்'' என்ற தீர்மானம் அவர்கள் எந்தளவிற்கு கல்வியின் முக்கியத்துவத்தினைஉணர்ந்திருக்கின்றனர் என்பதை தெரிவிக்கிறது. பல்வேறு சாதியினைச் சேர்ந்த அமைப்புகள், தனிநபர்கள்இதழ் நடத்துதல் அதன் மூலம் தங்கள் சாதி மக்களை ஒருங்கிணைத்தல், சமூக ஒடுக்குமுறையைவெளிக்கொணருதல், சமூகச் சிக்கல் குறித்து விவாதித்தல் போன்ற செயல்பாட்டிற்காக தாம் கற்றகல்வியினைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இந்த நோக் கங் களுக்காக தேவேந்திரர் இயக்கங்கள்கல்வியினைப் பயன்படுத்தி யிருக்காதது அந்த இயக்கத்தின் பலகீனத்திற்கு ஒரு காரணம் எனலாம்.

இதழற்ற இயக்கம்

இதழ் நடத்துதலை சாதி அமைப்புகள் பலவும் தங்களின் இயக்கச் செயல் பாட்டிற்கு அத்தியாவசியம் என்றுஉணர்ந்திருக்கின்றன, தலித் இயக்கங் களும் இதிலிருந்து விலகியிருக்கவில்லை. பறையர்களின் இயக்கச்செயல்பாட்டினை நோக்கும் பொழுது அவ்வியக்கம் மற்றும் அச்சாதி யினைச் சார்ந்தோர் பல இதழ்களைநடத்தியிருப்பதனைக் காணமுடிகி றது. ஆனால் தேவேந்திரர் இயக்கங்களை நோக்கும் பொழுது அவை இதழ்நடத்தியிருக்கவில்லை என்பது மட்டுமின்றி, இதழ் நடத்துவதற்கான எந்த முயற்சியினையும்எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் தேவேந்திரர் இயக்கம் ஏதாவதுஇதழ் நடத்தியிருந்ததா என்ற தேடலில் ஈடுபட்டு அது ஏமாற்றத்தில்தான் முடிந் தது. தேவேந்திரர்அமைப்புகளின் இதழற்ற இயக்கத்திற்கு இரண்டு அடிப்படைக் காரணங்களைக் கூறமுடியும். ஒன்று,காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர்களிடத்தில் மேற்கத்தியக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை இதரதலித் சாதிகளோடு ஒப்பிட்டு நோக்கினால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்திருப்பதனைக்காணமுடிகிறது. இரண்டா வது, அச்சு இயந்திரம் மற்றும் அச்சு ஊடகங்கள் புழக்கத்திலிருந்து நகரப்பகுதிகளுக்கு தேவேந்திரர்களின் இடப்பெயர்வு இல்லாதிருந்திருக்கிறது.

காலனிய விசுவாசமும் எதிர்ப்பும்

சாதிய இயக்கங்கள் காலனிய ஆட்சியை ஆதரித்தல் மற்றும் எதிர்த்தல் என்ற நிலைபாட்டுடன்இயங்கியிருப்பதனைக் காணலாம். காலனியாட்சி யினை எதிர்த்த இயக்கங்கள் காங்கிரஸ் நடத்திய பல்வேறுபோராட்டங் களில் பங்கேற்றிருப்பதனைக் காண முடிகிறது. காலனிய ஆட்சியினால் நேரடியாக பாதிக்கப்பட்டசாதியினர் காலனிய எதிர்ப்பு நிலைப்பாட் டினைக் கொண்டிருந்தனர். எல்லா சாதியினருக்கும் காலனிய ஆட்சிஏற்படுத்தியிருந்த நவீன நிறுவனங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது போல் தலித்துகளுக்கும் வழங்கப்பட்டது.இதனால் தலித்துகள் காலனிய ஆட்சி யினை ஆதரிக்கும் போக்கினை கைக்கொண்டனர். மேலும், காந்திமற்றும் காங்கிரஸ் இயக்கத்துடன் கொண்டிருந்த முரண்பாட்டின் காரண மாக விடுதலை இயக்கத்தில்பங்கேற்காமலும் இருந்தனர். இந்த காரணங்களினால் தலித்துகளை காலனிய ஆட்சியின் கைக்கூலிகள் என்றுமுத்திரை குத்துவது அபத்தமான செயலாகும். தேவேந்திரர்களி டத்தில் காலனியாட்சிக்கு விசுவாசமாகஇருத்தல் அதனை எதிர்த்தல் என்ற இரண்டு நிலைப்பாடு இருந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளி திராவிடஉழவர்குல மாநாடு மற்றும் இராமநாதபுரம் பூவைசிய இந்திரகுல மாநாட்டுத் தீர்மானங்களிலிருந்து இந்தஇயக்கங்கள் காலனியாட்சிக்கு விசுவாசமாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. எங்களுக்கு ஆதரவாகஇருக்கின்ற காலனியாட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்பதே இவ் விரண்டு மாநாடுகளின் முதல்தீர்மானமாகும். காட்டுத்தீ போல் பரவும் ஒத்துழையாமை இயக்கத்தை வெறுக்கிறோம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைகிற பொழுது அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்ப தற்கு திராவிட உழவர்குல மக்களுக்குபடைப் பயிற்சியளிக்க வேண்டும் என்ற திராவிட உழவர்குல மாநாட்டின் தீர்மானங்களிலிருந்து தேவேந்திரர்கள் காலனியாட்சிக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து களப்போர் புரியவும் தயாராக இருந்திருக்கின்றனர்என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பாண்டியர் சங்கம் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என்றேவலியுறுத்தியிருக்கிறது. இதிலிருந்து அவர்கள் காலனிய எதிர்ப்பு நிலைப் பாட்டினைக்கொண்டிருந்திருக்கின்றனர் என்று முடிவு செய்யலாம்.

ஹரிஜன் சேவா சங்கம் செய்த சேவையினால் காங்கிரஸ் இயக்கத்தோடு இணைந்து இந்திய விடுதலைஇயக்கத்தில் தேவேந்திரர்கள் பங்கேற்றி ருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்பொறுப் பினை வகித்த அய்யனார் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ்இயக்கத்தினைச் சேர்ந்த பழனியப்பன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதோடு தனதுபெயரை இந்தியன் மகன் என்று மாற்றிக் கொண்டதன் மூலமும் தேசப் பற்றினை வெளிப்படுத்தியிருக்கிறார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்த தாசப்பண்ணாடி என்றதேவேந்திரர் காந்தியின் கருத்தியல் குறித்தும் சுதந்திரத்தின் முக்கியத்து வம் குறித்தும் கிராமங்களில்நாடகம் நடத்தியுள்ளார். கோயம்புத்தூர் பகுதியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுமார்16 தேவேந்திரர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கின்றனர்.12எனவே, தேவேந்திரர் இயக்கம் காலனிய

ஆட்சியின் மூலம் சில பலன்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற அடிப் படையில் காலனியாட்சிக்கானஆதரவான நிலைப்பாட்டினை எடுத்திருக் கின்றன. அதேசமயம் காங்கிரஸ் மற்றும் காந்தியின்செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்ட பள்ளர்கள் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றிருக்கின்றனர். இதிலிருந்து காலனியஆட்சிக்கு ஆதரவு எதிர்ப்பு என்ற இரண்டுவகை நிலைப்பாடு பள்ளர்களிடத்தில் இருந்திருப்பது தெளிவாகிறது.


சமூக சீர்திருத்த இயக்கங்களுடனான உறவு

காலனியாட்சிக் காலத்தில் ஆரியர் திராவிடர் என்ற எதிரெதிர் கருத்து நிலையில் பிராமணர்கள் ஆரியரென்றும்பிராமணரல்லாதோர் திராவிடர் என்ற கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டது. சமூக விடுதலைக்கான வேட்கையின்பின்புலத்திலிருந்து உருவான திராவிடம் என்ற கருத்து நிலையாக்கத்துடனும் அதனை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களுடனும் பிராமணரல்லாத சாதி இந்துக்கள் முதற்கொண்டு சமூகத்தின் அடிமட்டத்திலிருத்தி வைக்கப்பட்டிருந்த சாதிகள்வரைஇணைந்திருந்த னர். சமூக சீர்திருத்தம் என்றளவில் மட்டுமல்லாது சாதி ஒழிப்பு, இந்துமத ஒழிப்பு என்ற புரட்சிகரஇலக்கினைக் கொண்டு செயல்பட்ட இயக்கங் களோடும் அதன் தலைவர்களோடும் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள்நட்புறவு கொண்டிருந்தன, இந்த நட்புறவு மாநில அளவில் மட்டுமின்றி அதனைக் கடந்தும் இருந்தது. குறிப்பாக, சமூகஉரிமைகளுக்காக மட்டுமின்றி சாதி ஒழிப்பு என்ற இலக்கினைக் கொண்டு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அம்பேத்கர்மற்றும் பெரியார் ஆகியோரோடு தமிழக தலித்துகள் நெருக்கமான நட்புறவினைக் கொண்டிருந்தனர். ஆனால், அம்பேத்கர்மற்றும் பெரியார் இவர்களோடு தேவேந்திரர் இயக்கங்கள் மேம்போக்கான நட்புறவினையே கொண்டிருந்தன. முதலில்தேவேந்திரர் இயக்கம் அம்பேத்கரோடு கொண்டிருந்த நட்புறவு குறித்து காண்போம்.

தேவேந்திரகுல மகாஜன சங்கத்தைச் சேர்ந்த தேக்கம்பட்டி பாலசுந்தரராசு 1920களின் நடுப்பகுதியிலிருந்தே அம்பேத்கருடன்உறவினை ஏற் படுத்திக்கொண்டார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பள்ளர்கள் அம்பேத்கரின் கோரிக்கை வெற்றிபெறவேண்டும் என்று தந்தி அடித்த தாக வாய்மொழித் தரவு உள்ளது. 1936ம் ஆண்டு பூவைசிய இந்திர குல வேளாளர்சங்கம் அம்பேத்கரை தென்தமிழகத்திற்கு அழைத்தது ஆனால் அவரால் வர இயலாமற் போனது. இருப்பினும் பாலசுந்தரராசுவின் தொடர் முயற்சியின் விளைவாக அம்பேத்கர் 29 டிசம்பர் 1946 அன்று மதுரை விக்டோரியா ஹாலில் பள்ளர்கள்ஒருங்கிணைத்திருந்த மாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றினர். அவரது ஆங்கில உரையை மேலக்கால் வீரபத்திரன் என்றதேவேந்திரர் மொழிபெயர்ப்பு செய்தார். இந்தக்கூட்டத்தில் தேவேந்திரர் சாதியைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் உட்படசிலர் பங்கேற்றனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது. அதாவது, இந்த மாநாட்டில்தான் முதன்முறையாக பல பகுதிகளைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பங்கேற்றனர். இருப்பினும், கோயம்புத்துர் மற்றும்திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

இனி, தேவேந்திரர் இயக்கம் பெரியாரோடு கொண்டிருந்து உறவு குறித்து விவரிக்கலாம். 31 ஆகஸ்ட் 1936 அன்றுதேவேந்திரர்கள் தேனி அருகே பெரியகுளத்தில் நடத்திய மாநாட்டில் தேவேந்திரர்களின் அழைப்பிற் கேற்ப பங்கேற்றபெரியார்14, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பெயரான தேவேந்திரர் என்பதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.15 காலனி ஆட்சிக்காலத்தின் போது பெரியார் தேவேந்திரர்கள் நடத்திய மாநாட்டில் ஒரேஒரு மாநாடு இதுதான். எனவே, ஏன்அம்பேத்கரோடும் பெரியாரோடும் தேவேந்திரர் இயக்கங்கள் மேம்போக்கான நட்புறவினைக் கொண்டிருந்தன என்பது குறித்துவிவாதிப்பது அவசியம். இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் முதலில் திராவிடம் என்ற கருத்துநிலையாக்கத்தோடு தேவேந்திரர்களுக்கு இருந்த பற்றுதல் குறித்து காண்பது அவசியம்.

கருவிலேயே கலைந்த திராவிடம்

திராவிடர் ஆரியர் என்ற இரண்டு முரண்பட்ட கருத்துநிலையாக்கத்தில் தலித்துகள் தங்களை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டனர். அது மட்டுமல்லாது தாங்கள்தான் திராவிடர்களிலும் தொல்குடிகள், மூத்தவர் கள் என்ற உரிமையையும்கோரினர். தொன்மையானவர் என்ற அடையாளத்திற்காக ஆதி-திராவிடர் என்ற பெயரினையும் தங்களுக்குச் சூட்டிக்கொண்டனர். எனவே, ஆதி-திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரல்ல அது உச்சபட்சத் தீண்டாமைக்கொடுமைக்குட்பட்டி ருந்த தொல்குடிகளின் அரசியல் அடையாளம். இந்த அரசியல் அடை யாளம் தங்களை சாதியற்றோர்என்று அறிவிக்கிறது, இது சாதியக் கட்டமைப்பினை வலியுறுத்தும் கோட்பாட்டிற்கும் அதன் ஏற்றத்தாழ் வான படிநிலைசமூக அமைப்பிற்கும் நேரெதிரானது. ஆதி-திராவிடர் என்ற பெயராலாயே உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குட்பட்டிருந்ததொல்குடிகள் அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த அரசியல் அடையாளப் பெயரினை அறிமுகம் செய்ததிலும்,அதற்கு ஆளும் வர்க் கத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றதிலும் பறையர் இயக்கங்கள் முக்கியப் பங்களிப்பினைச் செய்திருந்தபோதிலும் அது பறையர்களுக்கான பெயரல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி, நாம் தேவேந்திரர்இயக்கம் ஆதி-திராவிடர் என்ற அரசியல் அடையாளத்தோடு எந்தளவிற்கு பற்றுதல் கொண்டிருந்தது என்பது குறித்துக்காண்போம்.

திருச்சிராப்பள்ளியில் 21 & 22 மே 1922 அன்று நடைபெற்ற தேவேந் திரர்களின் மாநாடு திராவிடர் என்ற பெயரினையேபயன்படுத்தியிருக்கி றது. ஆதி-திராவிடர் என்ற பெயரினைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணை வெளியானபின்னரே இம்மாநாடு நடைபெற்றிருப்பி னும் அப்பெயரினை பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் திராவிடர்உழவர்குலம் என்று தங்களை அடையாளப்படுத்தியிருப்ப திலிருந்து அவர்கள் பிராமணீயத்திற்கு எதிரான நிலைப்பாட்டினைஎடுத் திருக்கின்றனர் என்று கூற இயலும். 1931ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி யில் நடைபெற்ற தேவேந்திரர்களின் மாநாடுஆதி-திராவிடர்கள் ஒன்றி ணைய வேண்டும் என்றும், இந்து மத எதிர்ப்பு நிலைப்பாட்டினையும் எடுத்திருக்கின்றனர். இராமநாதபுரத்தில் 20 & 21 ஜூன் 1925 அன்று நடைபெற்ற தேவேந்திரகுல மகாஜன சபா ஆதி-திராவிடர்களின் ஒரு பிரிவாக தங்களை இனம் கண்டிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளில் மட்டும்தான் தேவேந்திரர்கள் தங்களை ஆதி-திராவிடர்என்ற பெயரோடு அடையாளப்படுத்தியிருக்கின்றனர். இதிலும்கூட அவர்களுக்குள் சுய சாதி அடையாளம்மேலோங்கியிருந்திருப்பதனைக் காணமுடிகிறது. இந்த மூன்று நிகழ்வினைத் தவிர வேறு எந்த மாநாட்டிலும் அல்லதுஅமைப்புகளிலும் தேவேந்திரர்கள்

ஆதி-திராவிடர் மற்றும் திராவிடர் என்ற பெயரினை பயன்படுத்தியிருக்கவில்லை. ஆதி-திராவிடர் மற்றும் திராவிடர் என்றகருத்தாக்கங்கள் ஒருசில தேவேந்திரர் அமைப்புகளிடம் மட்டுமே கரு நிலையில் இருந்திருக்கிறது மற்ற இயக்கங்களிடம்அக்கருநிலை கூட உருவாகியிருக்கவில்லை. திரா விடர் மற்றும் ஆதி-திராவிடர் என்ற அடையாளத்தைப்பயன்படுத்தியிருக் கிற அமைப்புகள்கூட மாநாடு முடிவுற்ற பின்னர் எந்த செயல்பாடும் இல் லாத காரணத்தினால்கருநிலையிலிருந்து அக்கருத்தாக்கம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை, அது கருவிலேயே கலைந்துவிட்டது. நிலத்தோடும்நிலவுடைமை சார்ந்த கருத்தாக்கங்களோடும் பற்று கொண்டிருத்தல், நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை, உட்சாதி மற்றும்வட்டார உணர்வு, அற்பாயுசுத்தன்மை போன்றவை தேவேந்திரர்களிடம் திராவிடர் மற்றும் ஆதி-திராவிடர் கருத்தாக்கம்கருவில் கலைந்ததற்கும், அக்கரு பல தேவேந்திரர் இயக்கங்களிடம் உருப்பெறாமல் இருந்ததற்குமான காரணிகள்எனலாம்.

நிலவுடைமையோடு பிணைப்பு

தேவேந்திரர்களிடத்தில் எண்ணற்ற உட்பிரிவுகள் இருந்தன, இருந்து வரு கின்றன, ஆனால் அனைத்து உட்பிரிவுகளின்பாரம்பரியத் தொழில் விவ சாயம் மட்டுமே. பொதுவாக உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்கு உட் பட்டிருந்த சாதிகள் தாங்கள் பாரம்பரியமாக செய்து வந்த தொழிலினை விட்டொழித்துவிட்டு காலனியாட்சிக்காலத்தில் நவீனத்தும் வழங்கியதொழில்களில் ஈடுபடலாயினர். ஆனால் தேவேந்திரர்கள் அவ்வாறின்றி தங்களின் பாரம்பரியத் தொழிலாளனவிவாசாயத்தோடே பிணைத்துக் கொண்டிருந்தனர்.

நிலவுடைமைச் சமூகத்திற்கு எதிராக பொதுவுடைமை இயக்கம் பண்ணை யடிமைகளை ஒருங்கிணத்த பொழுதுதேவேந்திரர்களையும் அவ் வியக்கம் ஒருங்கிணைக்கின்ற முயற்சியில் இறங்கியது. தேவேந்திரர் மற்றும் பறையர்சாதிகளைச் சேர்ந்தோரே பெரும்பாலும் பண்ணையடி மைகளாக இருந்த காரணத்தினால் அவர்களே பொதுவுடைமை இயக்கத்தில் அதிகம் இணைந்தனர். இதனால் பொதுவுடைமைக் கட்சி பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று அழைக்கப்பட்டது.16 தேவேந்திரர்கள் பல பகுதிகளில் தங்களை பொதுவுடைமை இயக்கத்தோடு இணைத்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம்,நிலைவுடைமைச் சமூக அமைப் பிற்கும் அதன் ஒழுங்குமுறைக்கும் ஆதரவாக பகிரங்கமான நிலைப் பாட்டினையும்எடுத்திருக்கின்றனர். இறுக்கமான நிலவுடைமையைக் கொண்டிருந்த தஞ்சாவூர் பகுதியில் பொதுவுடைமை இயக்கம் நிலவுடைமைக்கு எதிரான கட்சி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நிலவுடைமைக்கு ஆதரவான நிலைபாட்டினையும்தேவேந்திரர்கள் எடுத்திருக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் 23 மார்ச் 1936அன்று தேளு ரில் மாநாடு நடத்தினர். இதில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங் களில் நிலவுடைமைஅமைப்பினையும் அதன் மதிப்பீடுகளையும் பாதுகாக்க வேண்டும், நிலவுடைமையாளர்களை எதிர்க்கக்கூடாது மற்றும்நிலவுடைமையாளர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும், பண்டைய மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும் போன்றதீர்மானங்களும் அடங்கும்.17

தேவேந்திரர்களின் நிலவுடமையுடனான பிணைப்பு என்பது அந்த அமைப்பினை பாதுகாத்தால் என்ற நிலைப்பாடு வரைநீண்டிருக்கிறது என்பதை தேளூர் மாநாடு வெளிப்படுத்துகிறது. தேளூர் மாநாட்டு தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டுஅனைத்து தேவேந்திரர் களும் நிலைவுடைமக்கு பாதுகாப்பு அரணாக இருந்தனர் என்று கூறி விடமுடியாது. ஆனால்பெரும்பாலான தேவேந்திரர்கள் நிலைவுடைமை யின் பிணைப்பிலிருந்து வெளியேறியிருக்காததால் அவர்களிடத்தில்நிலவுடைமைக்கு எதிரான கருத்துக்கள் உருவாகியிருக்கவில்லை.

நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை

உச்சபட்சத் தீண்டாமைக்குட்பட்ட சாதியினர் ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறுவதற்காக தம்முடைய வாழ்விடத்திலிருந்தேவெளியேறியி ருக்கின்றனர், இச்செயல்பாடு காலனியாட்சிக் காலத்தில் அதிகரித்திருக் கிறது.18 இடம்பெயருதல் பலசாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி யிருக்கிறது. இடம்பெயர்கின்றவர்கள் வேறிடம், குறிப்பாக நகரங் களுக்குச்செல்வதன் மூலம் சமூகப் பொருளாதார அளவில் ஒரு முன் னேறிய வாழ்வினையே வாழ்ந்திருக்கின்றனர். மேலும்,சமத்துவம் தொடர்பான கருத்துக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றினை உள் வாங்குவதற்கும் அவற்றில் பங்கெடுத்துஅதனை அனுபவிப்பதற்கு மான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. சமூக விடுதலைக்கான அமைப்புகளைஉருவாக்குதல், இயக்கச் செயல்பாடுகளில் பங்கெடுத் தல், அவைகளில் முன்னணிப் பாத்திரம் வகித்தல் போன்றவைகள்இடம் பெயர்ந்தவர்கள் மூலமே சாத்தியப்பட்டிருக்கிறது.

தேவேந்திரர்களின் இடப்பெயர்வு சமூக ஒடுக்குமுறையினால்தான் ஏற்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்அவர்கள் பெரும்பாலும் காலனியாட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்டத் தேயிலைத் தோட்டங்களுக்கேஇடம்பெயர்ந்திருக்கின்றனர். எந்த அளவிற்கு நகரங்களுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் வேறுபாடு இருக்கிறதோ அதேஅளவிற்கு தேயிலைத் தோட்டத்திற்கும் விவாசாயப் பண்ணைகளுக்கும் ஒப்புமை இருக்கிறது. ஒடுக்குமுறையற்ற சுதந்திரமான வாழ்வு, சமத்துவத்திற்கான கருத்தியல், அது குறித்த விவாதங்கள், அச்சு ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தினைகாண்பதற்கான வாய்ப்பு, கல்வி கற்றலுக்கான வாய்ப்பு போன்றவை நகரங்களில் கிடைத்தன. ஆனால் இவை எவையுமேமலைப்பிரதேசங்களில் அமைந்திருந்த தோட்டங்களில் இல்லை. இந்த நிலை விவாசயப் பண்ணைகளிலும் ஏற்கனவேஇருந்து வந்த ஒன்றுதான். எனவே, எவ்விதமான முற்போக்குக் கருத்தியல்களையோ, மேம்பட்ட வாழ்வினையோதேயிலைத் தோட்டங்களுக்கே இடம்பெயர்ந்த தேவேந்திரர்கள் அனுபவித்திருக்கவில்லை என்பதே திண்ணம். விவாசயப்பண்ணை யடிமை வாழ்க்கையிலிருந்து தேயிலைத் தோட்டத்தொழிலாளர் வாழ்க்கை குறிப்பிட்டுக் கூறுமளவிற்குமாறுபட்டிருக்கவில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை ஒருவிதத்தில் பின்னோக் கியப் பயணமே!. காரணம்,எவையெல்லாம் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் இருக்கின்றதோ அவற்றிலிருந்தெல்லாம் - உதார ணமாக, சமூகஅமைப்பில் பங்கெடுத்தல், அரசியல் விவாதத்தினைக் கவனித்தல், கல்வி கற்றல் போன்றவை- தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் பிரிந்துவிட்டனர்.

உட்சாதி & வட்டார உணர்வு

பொதுவாக தங்களுக்குள் இருக்கின்ற உட்சாதியினை ஒழித்தல் என்பது ஒடுக்கப்பட்ட சாதிகளிடத்தில் காலனியாட்சிக்காலத்தில் உருவானது. ஆனால் ஒரே தொழிலினைச் செய்தபோதிலும் -உயர்வு, தாழ்வு- என்ற எண்ணங்களுடன் பலபிரிவுகளாகப் பிரிந்திருந்த தேவேந்திரர்களின் உட்சாதியினை ஒழிப்பதற்கு அவ்வியக்கங்கள் முனைந்திருக்கவில்லை. மாறாக, தேவேந்திரர் இயக்கங்கள் உட்சாதி உணர்வோடே இயங்கியிருக் கின்றன. இந்த விவாதித்தினை வலுப்படுத்துவதற்குசில முக்கிய ஆதாரங்கள் உள்ளன:

1) தேவேந்திரர் அமைப்புகளின் பெயர்களும் -தேவேந்திரகுலம், பூவைசிய இந்திரகுலம், இந்திரகுலாதிப வெள்ளாளர்,பாண்டியர்- தனிநபர்களின் பெயர் பின்னொட்டுகளும் -தேவேந்திரர், மூப்பனார், பாண்டியர்- அவர்கள் உட்சாதி உணர்வோடேஇயங்கியிருக் கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது.

2) தேவேந்திரர் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அமைப்புகளின் நோக்கங்கள் - உ.தா. தேவேந்திரகுலவெள்ளாளர் வட்ட மேசை மாநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும், சென்னை மாகாண அவைக்கு சுப்பிரமணிய மூப்பனார்நியமிக்கப்படவேண்டும், இந்திரகுலாதிப வெள்ளாளர்களை முன்னேற்ற வேண்டும்- தேவேந்திரர்களின் உட்சாதிஉணர்வினையே வெளிப்படுத்துகிறது.

3) அவர்கள் ஒருபோதும் தங்களின் உட்சாதியினை உணர்வினை ஒழிக்கவேண்டும்என்றோ உட்சாதி உணர்வினைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்றோ வலியுறுத்தியிருக்கவில்லை. ஒவ்வொருஉட்சாதியும் தனித்தனி சாதியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு சாதிகளுக் கிடையே இருக்கின்றஏற்றத்தாழ்வான கருத்தியல், முரண்பாடு, மோதல் இவைகள் தேவேந்திரர் உட்சாதிக்குள் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்ற பொழுது இது காலனியாட்சிக் காலத்தின் பொழுது எந்தளவிற்கு இறுக்கமாக இருந்திருக்கும் என்பதனை மிக எளிதாகஊகித்துக் கொள்ளமுடியும். ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்களுக்கிடையேயான உட்சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கானமுயற்சியில் இருந்த பொழுது தேவேந்திரர்கள் அதனை ஒழிப்பதற்குப் பதிலாக அதனைப் பேணிப் பாதுகாத்துள்ளனர். உட்சாதியினை ஒழிப்பதற்கு முன்வந்திருக்காத தேவேந்திரர் அமைப்புகள் சாதி ஒழிப்பு என்று கோரிக்கையோடு அதுஇணைந்திருக்காதது வியப்புக்குரியதல்ல.

4) காலனியாட்சிக் காலத்தில் தாலுக்கா, மாவட்டம் போன்ற நிர்வாக முறைகள் உருவாக்கம், சாலை அமைத்தல், பேருந்துஅறிமுகம் போன்றவை சாதிகளுக்கு இடையே இருந்துவந்த வட்டார உறவினை விரிவடையச் செய்தது. ஆனால்,தேவேந்திரர் இயக்கம் பரந்து விரியாமல் வட்டாரங்களுக்குள்ளேயே இயங்கியது, அக்குறிப்பிட்ட வட்டாரத்தினைக் கடந்துஅமைப்புகள் கட்டப்பட்டிருக்கவில்லை. மேலும், ஒரே வட்டாரத்திற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்புகள் செயல்பட்டிருக்கிறன.

மாற்று மதமும் மதமாற்றமும்

இந்துமத சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இந்து மதத்திலிருந்து வெளியேறி மதம் மாறுதல் அல்லதுஅதற்கு எதிரான மாற்று மதத்தினை உருவாக்குவது என்பது உச்சபட்ச தீண்டாமைக்காட் பட்ட சாதி இயக்கங்களின்நிலைப்பாடாக இருந்திருப்பதனைக் காண லாம். மதம் மாறுதல் அல்லது மாற்று மதத்தினை உருவாக்குதல் இவற்றில்பிராமணீயக் கருத்தியலைப் புறக்கணித்தல் அதன் உள்ளீடு. மாற்றுமதத்தினை உருவாக்குவதில் இந்துமதஒடுக்குமுறையிலிருந்து விடுபடுதல் என்ற வேட்கை மட்டுமின்றி அதற்கு எதிராக சமத்துவத்திற் கான மாற்றுச்சமூகத்தினை, வாழ்க்கை முறையினை கட்டமைத்தல் என்ற போக்கும் உள்ளடங்கியுள்ளது. மாற்றுமதத்தினைகட்டமைத்தல் என்ற செயல்பாடு சம்பந்தப்பட்ட சாதிகள் அமைப்புரீதியாக அம்முயற்சி யினை எடுத்திருக்கின்றனர், அதுவும்ஒரு இயக்கமாகவே நடைபெற் றிருப்பதனைக் காணமுடிகிறது. மாற்றுமதத்திற்கான உதாரணமாக, சமார்களின் சத்னாமிஇயக்கம்19, பறையர்களின் பவுத்த இயக்கம்20 போன்றவற்றினைக் கூறலாம்.

தேவேந்திரர் இயக்கங்களின் செயல்பாடுகளை நோக்கும் பொழுது அவைகள் இந்து மதத்திற்கு மாற்றான மதத்தினைகட்டமைப்பதற்கு முயற்சித்திருக்கவில்லை. மாறாக, சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடு பட வேண்டும் என்ற நோக்கில்மதம் மாறியிருக்கின்றனர், இதுவும்கூட தேவேந்திரர் இயக்கங்களினால் வலியுறுத்தப்பட்டிருக்கவில்லை.சமூகஒடுக்குமுறையை அனுபவித்து உணர்ந்த தேவேந்திரர்கள் அவர்களின் சாதி இயக்கங்களின் துணையின்றி தன்னிச்சையாய்சில கிராமங்களில் மதம் மாறியிருக்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ஆலபுரம் பகுதியில் பெரும்பாலான தேவேந்திரர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளதாகடேவிட் மோஸ் குறிப்பிட்டுள்ளார்21. திருநெல்வேலி மாவட்டம் சீதைக்குறிச்சியில் 1900ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதேவேந்திரர்களிடத்தில் 1940களில் மத மாற்றத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 1944ல் அந்த சீதைக்குறிச்சி தேவேந்திரர்கள்கிறிஸ்துவத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறியதிலி ருந்து இதனை அறிந்துகொள்ள முடிகிறது.22 இதற்குப் பின்னர்1945ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 2000 பள்ளர்கள் இசுலாம் மதத்திற்கு மாறியுள்ளனர்23. கிறிஸ்துவத்திலும் சாதியம் தொடர்கிறது என்ற அவநம்பிக்கை தேவேந்திரர்களிடத்தில் உருவாகியிருக்கிறது என்றேஇதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. தலித்துகளின் மதமாற்றம் உள்ளூரளவிலேயே நிகழ்ந்திருக்கிறது அது ஒருஇயக்கமாக உருவாகியிருக்கவில்லை என்ற ஆய்வாளர் ஒருவரின் கூற்று தேவேந்திரர்களைப் பொறுத்த மட்டிலும்சரியானதே24. தேவேந் திரர்களின் மதமாற்றம் இந்துமதத்தின் மீது வெறுப்பு, அதன் ஒடுக்கு முறையிலிருந்து விடுபடுதல்என்ற நோக்கம் இருந்தபோதிலும் மாற்று மதத்தினை உருவாக்குதல் என்பது இல்லை. இதனால் சமத்துவத்திற் கானமாற்று மதத்தினை உருவாக்குதல் என்பது தேவேந்திரர்களிடத்தில் இல்லாதிருக்கிறது என்று கூற இயலும்.

அற்பாயுசுத்தன்மை

ஒருசிலவற்றினைத் தவிர மற்ற தேவேந்திரர் இயக்கங்கள் அற்பாயுசுத் தன்மை கொண்டவை. அதாவது அமைப்புகள்உருவாக்கப்பட்டு, அதற் கென்று சட்டத்திட்டங்கள், நோக்கம் போன்றவை வகுக்கக்கப்பட்டிருக்கும் ஆனால் அதற்குப் பின்னர்செயல்பாடு இருந்திருக்கவில்லை. சில வற்றில் மாநாடு நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆனால்அமைப்பு உருவாக்கப்படாததால் செயல்பாடு இருந்திருக்க வில்லை. எனவே தோன்றியதும் மறைதல், குறுகிய காலச்செயல்பாட் டிற்குப் பின்னர் உதிர்ந்துவிடுதல் என தேவேந்திரர் இயக்கங்களில் அற்பாயுத்தன்மையினைக் காணமுடிகிறது. மேலே விவாதிக்கப்பட்டிருக் கும் காரணிகளான -ஏற்றத்தாழ்வான உட்சாதி உணர்வு, வட்டார உணர்வு, நகர இடப்பெயர்வில்மந்தம், குறைவான கல்வி கற்றோர் மற்றும் வலுவான தலைமையின்மை- ஆகியன அற்பாயுசுத் தன்மைக்கு அடிப்படைக்காரணங்கள்.

குழந்தைப்பருவம்

சமூகச் சீர்திருத்த மற்றும் புரட்சிகர கருத்துக்களை முன்வைத்த தலைவர் களான அம்பேத்கர், பெரியார் போன்றோருக்கும்தேவேந்திரர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியினை ஏற்படுத்தியதில், நிலவுடைமை யோடும் அதன்கருத்தியல்களோடும் பற்றுதல், உட்சாதி மற்றும் வட்டார உணர்வு, நகரங்களுக்கு இடப்பெயர்வின்மை, மாற்றுமதத்தினைஉரு வாக்காமை மற்றும் அற்பாயுசு போன்ற காரணிகள் முக்கியப் பங்காற் றின. அம்பேத்கர், பெரியார் போன்றோரிடமும்அவர்களின் கருத்துக் களிடமும் பற்றற்றத் தன்மையினால் தேவேந்திரர் இயக்கத்தை சமஸ் கிருதமயமாக்க இயக்கம்அல்லது இந்துத்துவ இயக்கம் என்று கூறிவிட முடியாது. எவையெல்லாம் சமஸ்கிருதமயமாக்கச் செயல்பாடுகள் என்றுஎம்.என்.ஸ்ரீநிவாஸ் கூறுகிறாறோ அவற்றினை தேவேந்திரர் அமைப்பு கள் தங்கள் சாதியினருக்குப்பரிந்துரைத்திருக்கவில்லை. அத்தகையச் செயல்பாடுகள் அம்மக்களிடத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. இதிலிருந்துதேவேந்திரர்களிடத்தில் சமஸ்கிருதமயமாக்கல் செயல்பாடு நடைபெற்றிருக்கவில்லை என்பது தெளிவு.

அமைப்புரீதியாய் ஒருங்கிணைதல் என்பது 1920களில்தான் தேவேந் திரர்களிடத்தில் தொடங்கியதால் அது வளரும்குழந்தைப்பருவ நிலை யிலேயே இருந்தது. காலனியாட்சிக் காலத்தில் பிறந்து நீண்டநாட்கள் உயிர்ப்புடன் செயல்பட்டபெருமாள் பீற்றரின் தலைமையிலான இயக்கம் தனது மக்களை முன்னேற்றும் பணியிலேயே ஈடுபட்டது. இதுகாலனியாட்சிக்குப் பின்னர் தேவேந்திரர்களின் உக்கிரமான போராளி யான இம்மானுவேல் சேகரனை உருவாக்கியது. இந்தஅமைப்பிற்கு மட்டுமே நிலைவுடைமையிலிருந்து வெளியேறுதல், நகர இடப்பெயர்வு, சாதி மறுப்புத் திருமணம் போன்றதன்மைகள் உண்டு. ஆனாலும்கூட தேவேந்திரர் உட்சாதியினை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகத்தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக தேவேந்திரர் அமைப்புகளை நோக் கும் பொழுது அது காலனியாட்சிக் காலத்தில்குழந்தைப்பருவத்திலேயே இருந்தது என்று கூற முடியும்.

முடிவுரை

காலனியாட்சிக் காலத்தில் தேவேந்திரர் இயக்கங்கள் பல இருந்தபொழு திலும் அவையனைத்தும் ஒரேவிதமானநிலைப்பாட்டினை எடுத்திருக்க வில்லை.ஒவ்வொரு இயக்கமும் வெவ்வேறுவிதமான நிலைபாட்டினைக் கொண்டிருந்தன. இதனால் அந்தந்த இயக்கங்களின் வரலாற்றினை எழுதுவது என்பதும் கடினமான செயல்தான், காரணம் அவைகள்அற்பாயுசுத் தன்மை கொண்டவை. எனவேதான் தேவேந்திரர்களிடம் செயல்பட்ட தேவேந்திரர்களின் அனைத்துஇயக்கங்களின் இலக்கு, கருத்தியல், அரசியல் நிலைப்பாடு போன்றவை குறித்து பொதுமைப் படுத்தி எழுதுவதற்குஇக்கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக் கிறது. இவ்வாறு பொதுமைப்படுத்தி எழுதியிருக்கின்ற காரணத்தினால்இதனை தேவேந்திரர் இயக்கம் மற்றும் தேவேந்திரர் சமூகம் இரண்டிற்கு மான வரலாறு என்றே கூறலாம். மேலேவிவரிக்கப்பட்டிருக்கின்ற வரலாற்றிலிருந்து தேவேந்திரர் இயக்கம் இரட்டை நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது என்றுஒருவர் கூற முற்படலாம். ஆனால் அவ்வாறு கூறுவது தவறெனப்படுகிறது. பல தேவேந்திரர் இயக்கங்கள் செயல்பட்டகாரணத்தினால் அவை பல நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றன. மேலும் அவ்வியக்கங்கள் அதன் குழந்தைப்பருவத்திலிருந்த காரணத்தி னால் எவ்விதமான கருத்தியல்களும் வலுப்பெற்றிருக்கவில்லை. இதனாலேயே அவை இதரசமூகச் சீர்திருத்த மற்றும் புரட்சிகர இயக்கங் களிடமிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது. தேவேந்திரர் இயக்கம் என்னவகையானவை என்பதை காலனியாட்சிக்குப் பிந்தைய காலங்களின் செயல்பாடுகளிலிருந்து வரையறுப்பதற்குமுயற்சிக்கலாம்.

மேற்கோள்கள்:

1.G.O. No. 2962, Law (General), 03 November 1922.

2.G.O. No. 304, Law (Legislative), 21 August 1925.

3.Kudiarasu, 01 July 1931, p. 11.

4.Pattali Muzhakkam (September: 1998), p. 6.

5.An undated letter from Kandasamy, Namakkal, to A. Arunachalam, Tiruchirappalli.

6.V. Alex, Karisalil Or Urani (Madurai: Dalit Resource Centre, 1995).

7.G.O. No. 304, Law (Legislative), 08 August 1925.

8.Minute Note of Pandiar Sangam, dated 04 March 1925, p. 1.

9.By-Law of the Indirakulathipa Vellalar Aikya Sangam, 1933.

10.AB.Vallinayakam,‘Muthuveeran Balasundararasu’, Dalit Murasu (February:2003), Vijayadanushu,Tekkam patti Balasundararasu (Tirunelveli:Maruthamalar, 2004)

11.Fortnightly Report, 1936.

12.T.Gnanasekaran, India Sudandiraporun Devendrar kalum (Chennai:Tamizhar Panpattu Samuka Aaivu Mantram, 2000)

13.Interview: Pulavar Ramaiyah (64), Devendrar, Rajendranagar, Palayamkottai, Tirunelveli District, Date:15 March 2005.

14.AB.Vallinayakam,‘Muthuveeran Balasundararasu’, p. 62.

15.Interview: Gurusamy Siddhan (59), Devendrar, Coimbatore, Date:05 December 2005.

16.Saraswathi Menon, ‘Historical Development of Thanjavur Kisan Movement – Interplay of Class and

Caste Factors, Economic and Political Weekly, Vol. XIV, Nos. 7&8 (1979).

17.Pattali Muzhakkam (September: 1998).

18.G.Aloysius, Nationalism without a Nation in India (New Delhi: Oxford University Press, 1997), p. 72.

19.Gnana Prakasam, Social Separatism, Scheduled Castes and the Caste System (New Delhi: Rawat Publications, 1998).

20.G. Aloysius, Religion as Emancipatory Identity (New Delhi: New Age International (P) Limited), 1997.

21.David Mosse,‘Idioms of Subordination and Styles of Protest among the Christian and Hindu Harijan Castes in Tamil Nadu’, Contribution to Indian Sociology, Vol. 28, No. 1 (1994).

22.Emma Sandberg,‘Being a Dalit Woman in Seethaikurichy:Religious Affiliations and Social Situa tions’, in Lars Berge and Gunnel Cederlof, eds., Political Visions and Social Realities in Contemporary South India (Sweeden: Hogskolan Dalarna), 2003.

23.Fortnightly Report, 1945, p. 83.

24.Ghanshyam Shah, Social Movements in India: A Review of Literature (New Delhi: Sage, 2004)

Tuesday, July 27, 2010

புளியங்குடியில் மள்ளர் வரலாற்று முழக்க பொதுக்கூட்டம்

புளியங்குடி : புளியங்குடியில் மள்ளர் வரலாற்று முழக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் டாக்டர் துரையப்பா தலைமை வகித்தார். உமர் செரிப் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஞானசேகரன், தங்கராஜ், புரட்சி கவிதாசன், டாக்டர் ராஜதுரை, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சிவஜெயபிரகாஷ், எட்வர்டு ராஜன், கோவிந்தசாமி வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பட்டியலினத்தில் உள்ள 76 சாதி பெயர்களில் மள்ளர், பள்ளன், குடும்பன், மூப்பன், காலாடி, மண்ணாடி, தேவேந்திரகுலத்தான், கடையர், பலகான், பணிக்கர், வயற்தாரர், வாதியார் ஆகியவற்றை மள்ளர் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து பொதுப்பெயரில் அழைக்க ஆணையிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில்களில் நிலங்களில் நன்செய் நிலங்களின் ஆவணங்களின் படி மள்ளர்களுக்கு பயிரிடும் உரிமை உள்ளவையாகும். இவற்றை தற்போது ஆதிக்கமாக கையகப்படுத்தி உள்ளோரிடமிருந்து மீட்டு மீண்டும் மள்ளர்களுக்கே வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது. சங்க இலக்கிய புறநானூறு 77,78,79ன் படி மள்ளர்களே மூவேந்தர் என்பதை தமிழக வரலாற்று துறையின் ஆவணங்களில் வெளியிட கேட்டுக் கொள்ளப்பட்டது.

மள்ளர் இனமக்களுக்கு மாறியவர்களுக்கு சேர்த்து உள் ஒதுக்கீடு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மள்ளர்களை தலித், ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் என்று அழைத்து பேசுவதை, எழுதுவதை தடை செய்ய ஆணையிட வேண்டும். ஆண்டுதோறும் சித்திரை திங்கள் முழு நிலவு நாளை மள்ளர்களின் இந்திர விழாவாக அரசு நடத்த வேண்டும்.
மள்ளர்களின் உழவு தொழிலை சிறப்பித்து வெளிப்படுத்த அனைத்து பள்ளு இலங்கியங்கள், தல புராணங்கள் கண்டெடுத்து செம்மொழி திட்டத்தின் கீழ் புதுப்பித்து வெளியிட வேண்டும்.

சாதி வேற்றுமையை தவிர்த்திட ஒற்றுமையை மேம்படுத்த விடுதலை போராட்டத்தில் இணைந்து செயல்பட்டவர்களுக்கு சிலை நிறுவும் போது தனித்தனியே வைக்காமல் ஒன்று சேர்த்து அரசு சார்பில் சிலைகளை நிறுவ வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாணவரணி செல்வகுமார் நன்றி கூறினார்.

புதிய தமிழகம்

போயஸ் கார்டன் சந்திப்பு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அறிவிப்பு என அரசியல் பரபரப்பில் ஒதுங்கியிருந்த புதிய தமிழகம் கட்சி முன்னணிக்கு வந்திருக்கிறது. புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் புதிய தெம்புடன் அ.தி.மு.க. நிர்வாகிகளைச் சந்தித்து சால்வைகள், மாலைகளை பரஸ்பரம் அணிவித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனிந்த உற்சாகம் என அந்தக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்துக் கேட்டோம்.

மிக நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் எதிரணி வரிசையிலேயே இருந்த உங்களுக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் அழைப்பு எப்படி வந்தது?

டாக்டர் கிருஷ்ணசாமி : வரலாற்றின் நெடிய பக்கங்களில் எதிர்ப்பு என்கிற சொல் எப்பொழுதுமே ஒரு பக்கமாக உபயோகப்படுத்தப்படுவதில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக மண்உரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை ஆகிய கோரிக்கை களுக்காக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இயக்கம்தான் புதிய தமிழகம். இன்று நிலவும் அரசியல் சூழலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். அரசியல் மாற்றங்கள் அணிகளாகச் சேர்வதால்தான் நிகழும். அரசியலில் சில விஷயங்கள் சில நேரங்களில் நடந்தேறும். அதுபோலத்தான் இந்த கூட்டணியும் இயற்கையாகவே அமைந்தது.

இந்தக் கூட்டணி தமிழகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?

டாக்டர் கிருஷ்ணசாமி : தென் மாவட்டங்களில் முரண்பட்டு மோதிக்கொண்டிருந்த இரண்டு சமூகங்கள் அமைதியான வழியில் ஒன்றிணையும் சமூக ஒற்றுமையை இந்தக் கூட்டணி உருவாக்கும்.

அரசியலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அலையை உங்கள் கட்சியால் உருவாக்க முடியுமா?

டாக்டர் கிருஷ்ணசாமி : நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 76 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் வெறும் 3 சதவிகித வாக்குகளில்தான் தோல்வியடைந் திருக்கிறது. அந்த இடைவெளியை எங்கள் கட்சி நிரப்புவதோடு கூட்டணியை வெற்றிக்கு எங்கள் கட்சி அழைத்துச் செல்லும்.

தென் மாவட்டங்களில் 99-களில் நடை பெற்ற இடைத்தேர்தல்களில் அனைத்துத் தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு 15,000-க்கும் அதிகமான வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் பெற்ற கட்சி புதிய தமிழகம். 2001-க்குப் பிறகு எந்த ஒரு பெரிய கூட்டணியிலும் நாங்கள் இடம் பெறாததால் எங்களது ஆதரவாளர்கள் சோர்ந்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. என்கிற பெரிய கூட்டணி எங்களது ஆதரவு பலத்தை பல மடங்கு பெருக்கிவிடும்.

2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் நீங்கள் தி.மு.க. அணியில் சேர்ந்து போட்டியிட்டீர்களே? அப்பொழுது உங்கள் அணி வெற்றிபெறவில்லையே?

டாக்டர் கிருஷ்ணசாமி : அப்பொழுது தி.மு.க. ஆட்சியிலிருந்தது. மக்களின் மனநிலை ஆட்சிக்கு எதிராக இருந்தது. அ.தி.மு.க.-காங்கிரசுடன் கை கோர்த்து ஒரு மெகா கூட்டணியோடு தேர்தலை சந்தித்தது. அந்த பெரு அலைக்கு எதிராக நாங்கள் நீச்சலடித்தோம். எங்கள் அணி வட மாவட்டங்களில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோது, தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் வெறும் நூறு, இருநூறு வாக்குகளில்தான் தோல்வி யடைந்தது.

ஒட்டப்பிடாரத்தில் நான் 600 வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றேன். ஆலங் குளத்தில் ஆலடி அருணா, இப்போதைய சபாநாயகர் ஆவுடையப்பன் என பலர் சொற்ப வாக்குகளிலேயே வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். அந்தத் தேர்தலில் வீசிய பேரலையையே எதிர்த்து நின்று காட்டியது எங்கள் கட்சிதான்.

சமூகக் களத்தில் உங்களது கூட்டணி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?



டாக்டர் கிருஷ்ணசாமி : அரசியல்தான் ஒரு சமூகத்தின் அடி கட்டுமானம். அதில் ஒரு மாற்றம் ஏற்படும்போது அதன் மேல் கட்டுமானமாக இருப்பவை தானாக மாறும். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியுடன் எந்தக் கூட்டணியும் வைக்காத நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சி நான் போட்டியிட்ட தொகுதியில் என்னை ஆதரிப்பதாக மட்டும் சொன்னார். அங்கிருந்த தேவேந்திரகுல வேளாளர் இன மக்களையும் என்னையும் தேவரின இளைஞர் கள் ஆதரிக்க ஆரம் பித்தனர். நாங்கள் பூஜ்யம் ஓட்டு வாங்கிய முக்குலத்தோர் இன கிராமங்களில் எங்களுக்கு வாக்குகள் பதிவாகி யது.

அ.தி.மு.க.வுடனான இந்த கூட்டணி நம்மை ஒதுக்கு கிறார்கள் என பகை கொண்டிருந்த மக்களை இணக்கமாக அணைத்துக் கொண்டு போகும். யாரும் நினைத் துப் பார்க்க முடியாத சமூக நிகழ்வை நிச்சயம் உருவாக்கும். இனி தென் மாவட்டங்கள் அமைதிப் பூங்காவாக மாறும்.

நீங்கள்தான் கூட்டணி எனச் சொல்கிறீர்கள். அ.தி.மு.க. தரப்பிலிருந்து யாரும் இதுவரை சொல்லவில்லையே?

டாக்டர் கிருஷ்ணசாமி : ஜெ. என்னிடம் மிகவும் அன்புடன் வெளிப் படையாகவே கூட்டணி பற்றி பேசினார். எங்கள் சந்திப்பு பற்றிய செய்திகளை படத்துடன் பத்திரிகைகளில் வரவும் ஏற்பாடு செய்தார். இதுவே கூட்டணிக்கான தொடக் கம்தானே!

ஆதிதிராவிடர்

தேனி : அரசு அலுவலக பதிவேடுகள், தபால்கள், விண்ணப்பங்களில் "ஆதிதிராவிடர்' என்றே கட்டாயம் எழுத வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், தலித்துகள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அந்த இனத்தவரை "ஆதிதிராவிடர்' என்றே குறிப்பிட வேண்டுமென 2007ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது பரவலாக யாருக்கும் தெரியவராத நிலையில், பல அரசு அலுவலகங்களில் உதவித்தொகை பெறுவதற்கான படிவங்கள், அரசு பதிவேடுகளில் தாழ்த்தப்பட்டோர் என்ற வாசகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திலுள்ள படிவத்தில் தாழ்த்தப்பட்டோர் என்ற பகுதி இடம் பெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "இனி அனைத்து விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களில் ஆதிதிராவிடர் என குறிப்பிட வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

மருத நில மக்கள்

மருதம் நிலம் மக்கள் மன்றம்.உதயம்