மருத நில மக்கள், உமாசங்கர்

தமிழக முதல்வருக்கு நன்றி: உமா சங்கர் பேட்டி! சாதிச்
சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக்
கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு என தமிழக அரசால்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஆனந்த விகடனுக்கு
அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட்டம் நடத்தும்
அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது.
சென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும்
நின்று 'உமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்' என்று மக்கள்
ரிக்கைவைக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம் ஆனது
"ஆண்டவன் ஒருவனை நம்பியே களத்தில் நிற்கிறேன்.
உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள்கூட தொலைபேசி
வாயிலாகவும், இ-மெயில் மூலமாகவும் வார்த்தைகளிலும் எழுத்திலும்
நம்பிக்கையை விதைக்கிறார்கள். முன் எப்போதையும்விட, என் வீடு இப்போது
மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படுகிறது.
முதல்வருக்கு நன்றி!" - தெளிவாகப் பேசுகிறார்
உமாசங்கர். தமிழகத்தின் பிரபலமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த உமாசங்கரைப்
யிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.
"20 வயதிலேயே அரசுப் பணிக்கு வந்தவன் நான். வங்கிப்
பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 26-வது வயதில்
ஐ.ஏ.எஸ்., ஆனேன். முதலில் வேலூரில் ஒரு வருடம் உதவி கலெக்டர். பிறகு
மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர் என வெவ்வேறு ஊர்களிலும், துறைகளிலும் பணி.
பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக ஐந்து
ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். தி.மு.க. ஆட்சி வந்ததும் எல்காட் எம்.டி. பணி.
அதன் பிறகு, தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பணி. அங்கிருந்து வேறு
பணிக்கு திடீரென மாற்றப்பட்டேன். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக
லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்னை விசாரிக்க... நான் நீதிமன்றப் படியேற... பணி
நீக்கம் செய்யப்பட்டு இப்போது வீட்டில் உள்ளேன்."
"உங்களை தலித் ஆதரவு அதிகாரி என்று கூறுகிறார்களே?"
"இன்னும் சிலர் கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரமாக
மக்கள் பணி செய்வதால், சிலர் 'தீவிரவாதி' என்றார்கள். நான் எங்கு பணியில்
இருந்தாலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் பெருமளவில் என்னைச் சந்திப்பார்கள்.
அவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித்துகள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில்
பிறந்து வளர்ந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னைவிட வேறு யார்
உணர்ந்துகொள்ள முடியும்? என் அலுவலகம், வீடு இரண்டின் கதவும் அவர்களுக்காக
எப்போதுமே திறந்தே இருக்கும். இதனால்தானோ என்னவோ, எனக்குக் குறைவான
நண்பர்களே உள்ளனர். 20 ஆண்டுகள் பணி முடித்துவிட்டேன். மீதம் உள்ள 15
ஆண்டுகளையும் பாதி அரசுப் பணி, மீதி மக்கள் பணி என்று
வடிவமைத்துக்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது."
"உங்களை எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உங்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடும் அளவுக்கு வந்திருக்கிறாரே?""பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், 'உங்களுக்காகக்
களம் இறங்குகிறோம்' என்று பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு அலை. 'வேண்டாம்.
அரசியல் சாயம் பூசுவார்கள். நான் அரசியல் சார்பற்ற அதிகாரியாகவே தொடர
விரும்புகிறேன்' என்றேன். ஆனால், நெருக்கடி முற்ற முற்ற... அவர் களே
களத்துக்கு வந்துவிட்டார்கள். தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல்வேறு
அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி
வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட
தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
பேசுவார்... அறிக்கைவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 'பலவான்களை
உனக்காக இறங்கிப் பேசவைப்பேன்' என்கிறது பைபிள். அது தான் இன்று
நடக்கிறது!""கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்களுக்குள் பிணக்கு வர என்ன காரணம்?""நான் யாருக்கும் செல்லப் பிள்ளை கிடையாது. என்றுமே
மக்களுக்காக செயல்படும் பிள்ளையாகத்தான் இருந்து வருகிறேன். கோப்புகள்
அனைத்திலும் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளையே அரசியல்வாதிகள்
விரும்புகிறார்கள். ஆனால், இன்று துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே
துணிச்சலாகக் கேள்வி கேட்டு, சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லும் சில
அதிகாரிகளைத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்.""அ.தி.மு.க. ஆட்சி வனவாசம் என்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்
உங்களுக்கு நல்ல பதவிகள்தானே கொடுக்கப்பட்டன?"
"தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்த
முதல்வர், 'எங்கேய்யா போறே?' என்றார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்ப தால்
'எல்காட்' என்றேன். ஓ.கே. என்றார். அந்தச் சமயத்தில்தான் இலவச கலர் டி.வி.
திட்டம் நடைமுறைக்கு வந்தது. பலரும் பதறிஅடித்துப் பின்வாங்கிய அந்தத்
திட்டத்தை நான் கையில் எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன்.
எல்காட்டின் துணை நிறுவனமான 'எல்நெட்', டைடல் பார்க் அருகில் உள்ளது. இந்த
நிறுவனம் 'ஈ.டி.எல். இன்ஃப் ராஸ்ட்ரக்சர்' என்ற துணை நிறு வனத்தைத்
தொடங்கியது.இதற்காக 25 ஏக்கர் பள்ளிக்கரணையில் இடம்
வாங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த கம்பெனியே காணாமல் போனது. அந்த
முறைகேடுகளை விசாரிக்கப் போனபோது, கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச்
சொன்னார்கள். நானே அமர்ந்து தேடி, கிடைத்த கோப்புகளை வைத்து ஆய்வு செய்யச்
சென்றேன். நான் அங்கு சென்ற சில நிமிடங் களிலேயே 'உங்களை மாற்றி
விட்டார்கள்' என்று தகவல் வந் தது. ஆனால், முறைகேடுகள்பற்றி தெளிவான
அறிக்கையை, முதல்வர், தலைமைச் செயலர், எல்காட் போர்டு ஆகியோருக்கு
அனுப்பினேன். இவை அனைத்தையும் சென்னை உயர்நீதி மன்றம், மத்திய
தீர்ப்பாயத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நட
வடிக்கையில் இருப்பதால் பிர மாணப் பத்திரத்தில் குறிப்பிட் டுள்ளதைத் தவிர
வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை!"
"லஞ்ச ஒழிப்பு குற்ற விசாரணை உங்கள் மீது தொடர்கிறதா?"
"வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக
விசாரிக் கிறார்கள். உடனடியாக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது
செய்யுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால்,
அதை செய்யத் தயங்குகிறார்கள். ஏன் என்றால், என்னுடைய கணக்கு வழக்குகள்
அனைத்தும் தெளிவாக உள்ளன. ஓர் அரசு ஊழியன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எது
வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி.
கம்ப்யூட்டர், செல்போன், கார் என்று எது வாங்கினாலும் உடனடியாகத்
தெரியப்படுத்தி வருகிறேன்.
அப்படி இருக்கையில் என் மீது என்னவென்று அவர்கள்
எஃப். ஐ.ஆர். ஃபைல் செய்வார்கள்? இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை
உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப்
புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக்
காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து
தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கையின்பால்
கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு
இருக்கிறது? இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான்
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா? மேலும், சாதிச்
சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக்
கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு."
"கருணாநிதி அரசின் சாதனை என்று எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?"
"ஓரிரு விஷயங்கள் உண்டு. சி.பி.எஸ்.சி., மெட்ரிக்,
ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ-இந்தியன் என்று பாடத் திட்டத்தில் இருந்த
ஏற்றத்தாழ்வுகளைப் போக்கக் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம்
பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம், 'நேர் நேர் தேமா... நிறை நேர்
புளிமா' என்று குழப்பியடிக்கும் அளவுக்கு தமிழ்ப் பாடங்களில் இலக்கணம்
தேவை இல்லை என்பது என் கருத்து. செய்யுளைக் குறைத்து உரைநடையை
அதிகரித்தால், பிறகு மாணவர்களே ஆர்வமாக இலக்கணம் கற்பார்கள்."
"அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?"
"நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். 12 பேர்களில்
ஒருவ னாகப் பிறந்தவன். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தும்
அளவுக்கு வருமானம் உள்ள தம்பி இருக்கிறார். தங்கைகள், வெளிநாட்டில்
இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் கார் வாங்கி
உள்ளேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், கார் வாங்கிய ஒரே
ஐ.ஏ.எஸ்., அதிகாரி நானாகத்தான் இருப்பேன்.
இதையும் அரசிடம் தெரிவித்துவிட்டேன். என்
அனுபவங்களைப் புத்தகமாக எழுத உள்ளேன். 'நாசி யில் சுவாசம் இருக்கும்
மனிதர்களை நம்பாதே' என்றார் இயேசு. இனி, நானும் அப்படியே எச்சரிக்கையுடன்
வாழ இருக்கிறேன்!"
...